1 தாவீதின் ஆரோகண பாடல் மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

2 கர்த்தர் தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற கர்த்தருக்கு நன்றி.

7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய பெயரில் உள்ளது.

சங்கீதம் 124 ERV IRV TRV