1 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.

2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?

3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும், நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும் நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.

5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும் தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.

6 கர்த்தரைத் துதியுங்கள்! நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்குக் கர்த்தர் அனுமதிக்கவில்லை.

7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம். வலை அறுந்தது, நாம் தப்பினோம்.

8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது. கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

சங்கீதம் 124 ERV IRV TRV