1 ⁽மாசற்ற வழியில் நடப்போர்␢ பேறுபெற்றோர்;␢ ஆண்டவர் திருச்சட்டப்படி␢ நடப்போர் பேறுபெற்றோர்.⁾

2 ⁽அவர் தந்த ஒழுங்குமுறைகளைக்␢ கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;␢ முழுமனத்தோடு அவரைத் தேடுவோர்␢ பேறுபெற்றோர்.⁾

3 ⁽அநீதி செய்யாமல் அவரது வழியில்␢ நடப்போர் பேறுபெற்றோர்.⁾

4 ⁽ஆண்டவரே!␢ நீர் உம் நியமங்களைத் தந்தீர்;␢ அவற்றை நாங்கள் முழுமையாய்க்␢ கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.⁾

5 ⁽உம்முடைய விதிமுறைகளை␢ நான் கடைப்பிடிக்க,␢ என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால்␢ எவ்வளவோ நலம்!⁾

6 ⁽உம் கட்டளைகளை எல்லாம்␢ கருத்தில் கொண்டிருந்தால்,␢ இகழ்ச்சியுறேன்;⁾

7 ⁽உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு␢ நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.⁾

8 ⁽உம் விதிமுறைகளை␢ நான் கடைப்பிடிப்பேன்;␢ என்னை ஒருபோதும்␢ கைவிட்டுவிடாதேயும்.⁾

9 ⁽இளைஞர் தம் நடத்தையை␢ மாசற்றதாய்க் காத்துக் கொள்வது␢ எவ்வாறு? உம் வாக்கைக்␢ கடைப்பிடிப்பதால் அன்றோ?⁾

10 ⁽முழுமனத்தோடு␢ நான் உம்மைத் தேடுகின்றேன்;␢ உம் கட்டளைகளைவிட்டு␢ என்னை விலகவிடாதேயும்.⁾

11 ⁽உமக்கெதிராய்␢ நான் பாவம் செய்யாதவாறு␢ உமது வாக்கை␢ என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.⁾

12 ⁽ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்;␢ எனக்கு உம் விதிமுறைகளைக்␢ கற்பித்தருளும்.⁾

13 ⁽உம் வாயினின்று வரும்␢ நீதித்தீர்ப்புகளை எல்லாம்␢ என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.⁾

14 ⁽பெருஞ்செல்வத்தில்␢ மகிழ்ச்சி அடைவதுபோல்,␢ நான் உம் ஒழுங்குமுறைகளின்படி␢ நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾

15 ⁽உம் நியமங்களைக் குறித்து␢ நான் சிந்திப்பேன்;␢ உம் நெறிகளில்␢ என் சிந்தையைச் செலுத்துவேன்;⁾

16 ⁽உம் விதிமுறைகளில்␢ நான் மகிழ்ச்சியுறுகின்றேன்;␢ உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.⁾

17 ⁽உம் அடியானுக்கு நன்மை செய்யும்;␢ அப்பொழுது, நான் உம் சொற்களைக்␢ கடைப்பிடித்து வாழ்வேன்.⁾

18 ⁽உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை␢ நான் கண்டுணருமாறு␢ என் கண்களைத் திறந்தருளும்.⁾

19 ⁽இவ்வுலகில் நான்␢ அன்னியனாய் உள்ளேன்;␢ உம் கட்டளைகளை␢ என்னிடமிருந்து மறைக்காதேயும்.⁾

20 ⁽எந்நேரமும்␢ உம் நீதிநெறிகளை முன்னிட்டு␢ என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.⁾

21 ⁽செருக்குற்றோரைக் கண்டிக்கின்றிர்;␢ உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர்␢ சபிக்கப்பட்டவரே.⁾

22 ⁽பழிச்சொல்லையும், இழிவையும்␢ என்னிடமிருந்து அகற்றியருளும்;␢ ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை␢ நான் கடைப்பிடித்துள்ளேன்.⁾

23 ⁽தலைவர்கள் ஒன்றுகூடி␢ எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,␢ உம் ஊழியன்␢ உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே␢ சிந்திக்கின்றேன்.⁾

24 ⁽ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள்␢ எனக்கு இன்பம் தருகின்றன;␢ அவையே எனக்கு அறிவுரையாளர்.⁾

25 ⁽நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்;␢ உம் வாக்கின்படி␢ எனக்கு வாழ்வளித்தருளும்.⁾

26 ⁽என் வழிமுறைகளை␢ உமக்கு எடுத்துச் சொன்னேன்;␢ நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்;␢ உம் விதிமுறைகளை␢ எனக்குக் கற்றுத்தாரும்.⁾

27 ⁽உம் நியமங்கள் காட்டும் வழியை␢ என்றும் உணர்த்தியருளும்;␢ உம் வியத்தகு செயல்கள்பற்றி␢ நான் சிந்தனை செய்வேன்.⁾

28 ⁽துயரத்தால் என் உள்ளம்␢ கலக்கமுற்றுள்ளது;␢ உமது வாக்கின்படி␢ என்னைத் திடப்படுத்தும்.⁾

29 ⁽பொய் வழியை␢ என்னைவிட்டு விலக்கியருளும்;␢ உமது திருச்சட்டத்தை␢ எனக்குக் கற்றுத்தாரும்.⁾

30 ⁽உண்மையின் பாதையை␢ நான் தேர்ந்துகோண்டேன்;␢ உம் நீதிநெறிகளை␢ என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.⁾

31 ⁽உம் ஒழுங்குமுறைகளை நான்␢ உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்;␢ ஆண்டவரே!␢ என்னை வெட்கமடையவிடாதேயும்.⁾

32 ⁽நீர் என் அறிவை விரிவாக்கும்போது,␢ உம் கட்டளைகள் காட்டும் வழியில்␢ நான் விரைந்து செல்வேன்.⁾

33 ⁽ஆண்டவரே! உம் விதிமுறைகள்␢ காட்டும் வழியை␢ எனக்குக் கற்றுத்தாரும்;␢ நான் அவற்றை␢ இறுதிவரை கடைப்பிடிப்பேன்.⁾

34 ⁽உம் திருச்சட்டத்தின்படி நடக்க␢ எனக்கு மெய்யுணர்வுதாரும்.␢ அதை நான் முழு உள்ளத்தோடு␢ கடைப்பிடிப்பேன்.⁾

35 ⁽உம் கட்டளைகள் காட்டும் நெறியில்␢ என்னை நடத்தும்; ஏனெனில்,␢ அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.⁾

36 ⁽உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்␢ நாட்டங்கொள்ளச் செய்யும்;␢ தன்னலத்தை நாடவிடாதேயும்.⁾

37 ⁽வீணானவற்றை நான் பாராதபடி␢ என் கண்களைத் திருப்பிவிடும்;␢ உம் வழிகளின் வாயிலாய்␢ எனக்கு வாழ்வளித்தருளும்.⁾

38 ⁽உமக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ அளித்த வாக்குறுதியை␢ உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.⁾

39 ⁽என்னை அச்சுறுத்தும்␢ பழிச்சொல் எதற்கும்␢ என்னை உள்ளாக்காதேயும்; ஏனெனில்,␢ உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.⁾

40 ⁽உம் நியமங்களைப்␢ பெரிதும் விரும்பினேன்;␢ நீர் நீதியுள்ளவராய் இருப்பதால்␢ எனக்கு வாழ்வளியும்.⁾

41 ⁽ஆண்டவரே! உமது பேரன்பு␢ எனக்குக் கிடைக்கச் செய்யும்;␢ உமது வாக்குறுதியின்படி␢ நீர் என்னை மீட்பீராக!⁾

42 ⁽அப்போது, என்னைப் பழிப்போர்க்கு␢ நான் ஏற்ற பதில் கூறுவேன்;␢ ஏனெனில், உமது வாக்கில்␢ எனக்கு நம்பிக்கை உண்டு.⁾

43 ⁽என் வாயினின்று உண்மையின் சொற்கள்␢ நீங்கவிடாதேயும்;␢ ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது␢ நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.⁾

44 ⁽உமது திருச்சட்டத்தை␢ நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்;␢ என்றென்றும் எக்காலமும்␢ அதைப் பின்பற்றுவேன்.⁾

45 ⁽உம் நியமங்களை நான் நாடியுள்ளதால்␢ பரந்த பாதையில்␢ தடையின்றி நான் நடப்பேன்.⁾

46 ⁽உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி␢ நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்;␢ வெட்கமுறமாட்டேன்.⁾

47 ⁽உம் கட்டளைகளில் நான்␢ மகிழ்ச்சியுறுகின்றேன்;␢ அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.⁾

48 ⁽நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி␢ என் கைகளை உயர்த்துகின்றேன்;␢ உம் விதிமுறைகளைப் பற்றி␢ நான் சிந்திப்பேன்.⁾

49 ⁽உம் ஊழியனுக்கு நீர் தந்த␢ வாக்கை நினைவுகூரும்;␢ அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.⁾

50 ⁽உம் வாக்கு என் துன்பத்தில்␢ எனக்கு ஆறுதல் அளிக்கின்றது;␢ ஏனெனில், அது எனக்கு␢ வாழ்வளிக்கின்றது.⁾

51 ⁽செருக்குற்றோர் என்னை␢ அளவின்றி ஏளனம் செய்கின்றனர்;␢ ஆனால், உம் திருச்சட்டத்தினின்று␢ நான் விலகவில்லை.⁾

52 ⁽ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த␢ நீதித் தீர்ப்புகளை␢ நான் நினைவு கூர்கின்றேன்;␢ அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.⁾

53 ⁽உம் திருச்சட்டத்தைக் கைவிடும்␢ தீயோரைப் பார்க்கும்போது␢ சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.⁾

54 ⁽என் வாழ்க்கைப் பயணத்தில்␢ உம் விதிமுறைகள் எனக்குப்␢ புகழ்ப் பாக்களாய் உள்ளன.⁾

55 ⁽ஆண்டவரே! இரவிலும் நான்␢ உமது பெயரை நினைவு கூர்கின்றேன்;␢ உமது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.⁾

56 ⁽நான் இந்நிலையை அடைந்துள்ளது␢ உமது நியமங்களைக்␢ கடைப்பிடிப்பதால்தான்.⁾

57 ⁽ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு;␢ உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக␢ நான் வாக்களித்துள்ளேன்.⁾

58 ⁽என் முழுமனத்தோடு␢ உம் திருமுகத்தை நாடினேன்;␢ உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு␢ அருள்கூரும்.⁾

59 ⁽நான் நடக்கும் வழிகளை␢ நன்கு ஆய்ந்தேன்;␢ உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய்␢ அடியெடுத்து வைத்தேன்.⁾

60 ⁽உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க␢ நான் விரைகின்றேன்;␢ காலம் தாழ்த்தவில்லை.⁾

61 ⁽தீயோரின் கட்டுகள்␢ என்னை இறுக்குகின்றன;␢ ஆயினும், உம் திருச்சட்டத்தை␢ நான் மறவேன்.⁾

62 ⁽நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து,␢ உம்மைப் புகழ்ந்துபாட␢ நள்ளிரவில் எழுகின்றேன்.⁾

63 ⁽உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும்␢ உம் நியமங்களைக்␢ கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.⁾

64 ⁽ஆண்டவரே! உமது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது;␢ உம் விதிமுறைகளை␢ எனக்குக் கற்பியும்!⁾

65 ⁽ஆண்டவரே!␢ உமது வாக்குறுதிக்கேற்ப,␢ உம் ஊழியனுக்கு␢ நன்மையை செய்துள்ளீர்!⁾

66 ⁽நன் மதியையும் அறிவாற்றலையும்␢ எனக்குப் புகட்டும்;␢ ஏனெனில், உம் கட்டளைகள் மீது␢ நம்பிக்கை வைக்கின்றேன்.⁾

67 ⁽நீர் என்னைத் தண்டிக்குமுன்பு␢ நான் தவறிழைத்தேன்;␢ ஆனால், இப்போது␢ உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.⁾

68 ⁽நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;␢ எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.⁾

69 ⁽செருக்குற்றோர் என்னைப்பற்றிப்␢ பொய்களைப் புனைகின்றார்கள்;␢ நானோ முழுமனத்துடன்␢ உம் நியமங்களைக்␢ கடைப்பிடிக்கின்றேன்.⁾

70 ⁽அவர்கள் இதயம்␢ கொழுப்பேறிப் போயிற்று.␢ நானோ உம் திருச்சட்டத்தில்␢ மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾

71 ⁽எனக்குத் துன்பம் விளைந்தது␢ என் நன்மைக்காகவே;␢ அதனால், உம் விதிமுறைகளை␢ நான் கற்றுக்கொண்டேன்.⁾

72 ⁽நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,␢ ஆயிரக்கணக்கான பொன்,␢ வெள்ளிக் காசுகளைவிட␢ எனக்கு மேலானது.⁾

73 ⁽உம் கைகளே என்னை உருவாக்கின;␢ என்னை வடிவமைத்தன;␢ உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள␢ எனக்கு மெய்யுணர்வு தாரும்.⁾

74 ⁽உமக்கு அஞ்சுவோர்,␢ உமது வாக்கை நான் நம்பினதற்காக␢ என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.⁾

75 ⁽ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள்␢ நேரியவை என அறிவேன்;␢ நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.⁾

76 ⁽எனக்கு ஆறுதலளிக்குமாறு␢ உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;␢ உம் ஊழியனுக்கு␢ வாக்குறுதி அளித்தீர் அன்றோ!⁾

77 ⁽நான் பிழைத்திருக்கும்படி␢ உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்;␢ ஏனெனில், உமது திருச்சட்டமே␢ எனக்கு இன்பம்.⁾

78 ⁽செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக!␢ அவர்கள் பொய்யுரை கூறி␢ என்னை ஒடுக்கினார்கள்;␢ நானோ உம் நியமங்கள் பற்றிச்␢ சிந்தனை செய்வேன்.⁾

79 ⁽உமக்கு அஞ்சிநடப்போர்,␢ உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய␢ அறிவுடையோர்␢ என் பக்கம் திரும்புவராக!⁾

80 ⁽உம் நியமங்களைப் பொறுத்த மட்டில்␢ என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக!␢ அதனால், நான் வெட்கமுறேன்.⁾

81 ⁽நீர் அளிக்கும் மீட்புக்காக␢ என் நெஞ்சம் ஏங்குகின்றது;␢ உம் வாக்கை நான் நம்புகின்றேன்.⁾

82 ⁽உம் வாக்குறுதியை எதிர்நோக்கி␢ என் கண்கள் பூத்துப்போயின;␢ ‘எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?’␢ என்று வினவினேன்.⁾

83 ⁽புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்;␢ உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.⁾

84 ⁽உம் ஊழியன் எத்தனை நாள்␢ காத்திருக்கவேண்டும்?␢ என்னைக் கொடுமைப்படுத்துவோரை␢ என்று தண்டிப்பீர்?⁾

85 ⁽உமது திருச்சட்டப்படி நடக்காமல்,␢ செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்;⁾

86 ⁽உம் கட்டளைகள் எல்லாம்␢ நம்பத்தக்கவை; § அவர்கள் பொய்யுரை கூறி␢ என்னை ஒடுக்குகின்றனர்;␢ எனக்குத் துணை செய்யும்.⁾

87 ⁽அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை␢ ஏறக்குறைய அழித்துவிட்டனர்;␢ நானோ உம் நியமங்களைக்␢ கைவிடவில்லை.⁾

88 ⁽உமது பேரன்புக்கேற்ப␢ என்னை உயிரோடு வைத்திரும்,␢ நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை␢ நான் கடைப்பிடிப்பேன்.⁾

89 ⁽ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது␢ உமது வாக்கு;␢ விண்ணுலகைப்போல்␢ அது நிலைத்துள்ளது.⁾

90 ⁽தலைமுறை தலைமுறையாய் உள்ளது␢ உமது வாக்குப் பிறழாமை;␢ நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர்,␢ அது நிலைபெற்றுள்ளது.⁾

91 ⁽உம் ஒழுங்குமுறைகளின்படியே␢ அனைத்தும் இன்றுவரை␢ நிலைத்துள்ளன.␢ ஏனெனில், அவை␢ உமக்கு ஊழியம் செய்கின்றன.⁾

92 ⁽உமது திருச்சட்டம் எனக்கு␢ இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால்␢ என் துன்பத்தில் நான்␢ மடிந்து போயிருப்பேன்.⁾

93 ⁽உம் நியமங்களை நான்␢ எந்நாளும் மறவேன்;␢ ஏனெனில், அவற்றைக்கொண்டு␢ என்னைப் பிழைக்க வைத்தீர்.⁾

94 ⁽உமக்கே நான் உரிமை;␢ என்னைக் காத்தருளும்;␢ ஏனெனில், உம் நியமங்களையே␢ நான் நாடியுள்ளேன்.⁾

95 ⁽தீயோர் என்னை அழிக்கக்␢ காத்திருக்கின்றனர்;␢ நானோ உம் ஒழுங்குமுறைகளை␢ ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.⁾

96 ⁽நிறைவான அனைத்தின் எல்லையையும்␢ நான் பார்த்துவிட்டேன்;␢ உமது கட்டளையின் நிறைவோ␢ எல்லை அற்றது.⁾

97 ⁽ஆண்டவரே! நான்␢ உமது திருச்சட்டத்தின்மீது␢ எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!␢ நாள் முழுவதும்␢ அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.⁾

98 ⁽என் எதிரிகளைவிட என்னை␢ ஞானியாக்கியது உமது கட்டளை;␢ ஏனெனில், என்றென்றும்␢ அது என்னோடு உள்ளது.⁾

99 ⁽எனக்கு அறிவு புகட்டுவோர்␢ அனைவரினும் நான்␢ விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்;␢ ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே␢ நான் சிந்திக்கின்றேன்;⁾

100 ⁽முதியோர்களைவிட␢ நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன்.␢ ஏனெனில், உம் நியமங்களைக்␢ கடைப்பிடிக்கின்றேன்.⁾

101 ⁽உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு␢ தீயவழி எதிலும் நான் கால் வைக்காது␢ பார்த்துக் கொள்கின்றேன்.⁾

102 ⁽உம் நீதிநெறிகளைவிட்டு␢ நான் விலகவில்லை;␢ ஏனெனில், நீர்தாமே␢ எனக்குக் கற்றுத் தந்தீர்.⁾

103 ⁽உம் சொற்கள் என் நாவுக்கு␢ எத்துணை இனிமையானவை!␢ என் வாய்க்குத்␢ தேனினும் இனிமையானவை.⁾

104 ⁽உம் நியமங்களால் நான்␢ நுண்ணறிவு பெறுகின்றேன்.␢ ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும்␢ நான் வெறுக்கின்றேன்.⁾

105 ⁽என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!␢ என் பாதைக்கு ஒளியும் அதுவே!⁾

106 ⁽நீதியான உம் நெறிமுறைகளை␢ நான் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டு␢ உறுதிமொழி தந்துள்ளேன்.⁾

107 ⁽ஆண்டவரே! மிக மிகத்␢ துன்புறுத்தப்படுகின்றேன்;␢ உம் வாக்குறுதியின்படி␢ என்னை உயிரோடு வைத்தருளும்.⁾

108 ⁽நான் மனமுவந்து வாயார␢ உம்மைப் புகழ்வதை ஆண்டவரே!␢ தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்;␢ உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.⁾

109 ⁽நான் என்னுயிரைக்␢ கையில்வைத்துள்ளேன்;␢ ஆயினும், உம் திருச்சட்டத்தை␢ நான் மறவேன்.⁾

110 ⁽தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்;␢ ஆனால், உம் நியமங்களினின்று␢ நான் பிறழவில்லை.⁾

111 ⁽உம் ஒழுங்குமறைகளை என்றும்␢ என் உரிமைச் சொத்தாய்க்␢ கொண்டுள்ளேன்.␢ ஆகவே, அவை என் இதயத்தை␢ மகிழ்விக்கின்றன.⁾

112 ⁽உம் விதிமுறைகளைச்␢ செயல்படுத்துவதில் என் உள்ளம்,␢ என்றென்றும், இறுதிவரை␢ நாட்டம் கொண்டிருக்கும்.⁾

113 ⁽இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்;␢ உமது திருச்சட்டத்தின்மீது␢ பற்றுக்கொண்டுள்ளேன்.⁾

114 ⁽நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்;␢ உமது வாக்கில்␢ நான் நம்பிக்கை வைக்கின்றேன்.⁾

115 ⁽தீயன செய்வோரே!␢ என்னை விட்டு விலகுங்கள்;␢ என் கடவுளின் கட்டளைகளை␢ நான் கடைப்பிடிப்பேன்;⁾

116 ⁽நான் பிழைக்குமாறு,␢ உமது வாக்குறுதிக்கேற்ப␢ என்னைத் தாங்கியருளும்;␢ எனது நம்பிக்கை␢ வீண்போகவிடாதேயும்.⁾

117 ⁽என்னைத் தாங்கிக்கொள்ளும்;␢ நான் மீட்புப் பெறுவேன்;␢ எந்நாளும் உம் விதிமுறைகளைக்␢ கருத்தில் கொண்டிருப்பேன்.⁾

118 ⁽உம் விதிமுறைகளைவிட்டு␢ விலகுவோர் அனைவரையும்␢ நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்;␢ அவர்களின் சூழ்ச்சிகள்␢ வீணாய்ப் போகும்.⁾

119 ⁽பூவுலகின் பொல்லார் அனைவரையம்␢ நீர் களிம்பெனக் கருதுகின்றீர்;␢ ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள்␢ மீது பற்றுக்கொண்டுள்ளேன்.⁾

120 ⁽உம்மீது கொண்டுள்ள அச்சத்தால்␢ என் உடல் சிலிர்க்கின்றது;␢ உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு␢ நான் அஞ்சி நடுங்குகின்றேன்.⁾

121 ⁽நீதியும் நேர்மையும் ஆனவற்றையே␢ செய்துள்ளேன்;␢ என்னை ஒடுக்குவோர் கையில்␢ என்னை விட்டுவிடாதேயும்.⁾

122 ⁽உம் ஊழியனின் நலத்தை␢ உறுதிப்படுத்தும்;␢ செருக்குற்றோர் என்னை␢ ஒடுக்கவிடாதேயும்.⁾

123 ⁽நீர் தரும் விடுதலையையும்␢ உமது நீதியான␢ வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து,␢ என் கண்கள் பூத்துப்போயின.⁾

124 ⁽உம் பேரன்பிற்கேற்ப␢ உம் ஊழியனுக்குச் செய்தருளும்;␢ உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.⁾

125 ⁽உம் ஊழியன் நான்,␢ எனக்கு நுண்ணறிவு புகட்டும்;␢ அப்போது உம் ஒழுங்குமுறைகளை␢ அறிந்துகொள்வேன்.⁾

126 ⁽ஆண்டவரே! நீர் செயலாற்றும்␢ நேரம் வந்துவிட்டது;␢ உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.⁾

127 ⁽ஆகவே, பொன்னிலும்␢ பசும்பொன்னிலும் மேலாக␢ உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.⁾

128 ⁽உம் நியமங்களை எல்லாம்␢ நீதியானவை என்று␢ ஏற்றுக்கொண்டேன்;␢ பொய்யான வழி அனைத்தையும்␢ வெறுக்கின்றேன்.⁾

129 ⁽உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை;␢ ஆகவே, நான் அவற்றைக்␢ கடைப்பிடித்து வருகின்றேன்.⁾

130 ⁽உம் சொற்களைப்பற்றிய விளக்கம்␢ ஒளி தருகின்றது;␢ அது பேதைகளுக்கு␢ நுண்ணறிவு ஊட்டுகிறது.⁾

131 ⁽வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்;␢ பெருமூச்சு விடுகின்றேன்;␢ ஏனெனில், உம் கட்டளைகளுக்காக␢ ஏங்குகின்றேன்.⁾

132 ⁽உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு␢ நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல்,␢ என் பக்கம் திரும்பி␢ எனக்கும் இரங்கும்!⁾

133 ⁽உமது வாக்கில் என் காலடிகளை␢ நிலைப்படுத்தும்!␢ தீயது எதுவும் என்னை␢ மேற்கொள்ளவிடாதேயும்!⁾

134 ⁽மனிதர் செய்யும் கொடுமையினின்று␢ என்னை விடுவியும்!␢ உம் நியமங்களை நான்␢ கடைப்பிடிப்பேன்.⁾

135 ⁽உம் ஊழியன்மீது உமது முகஒளி␢ வீசச் செய்யும்!␢ உம் விதிமுறைகளை எனக்குக்␢ கற்பித்தருளும்.⁾

136 ⁽உமது திருச்சட்டத்தைப்␢ பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு,␢ என் கண்களினின்று நீர்␢ அருவியாய் வழிந்தது.⁾

137 ⁽ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்;␢ உம் நீதிநெறிகள் நேர்மையானவை.⁾

138 ⁽நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை;␢ அவை முற்றிலும் நம்பத்தக்கவை.⁾

139 ⁽என் பகைவர் உம் வார்த்தைகளை␢ மறந்துவிட்டதால்,␢ அவற்றின்மீது நான் கொண்டுள்ள␢ தணியாத ஆர்வம்␢ என்னை எரித்துவிடுகின்றது.⁾

140 ⁽உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது,␢ உம் ஊழியன் அதன்மீது␢ பற்றுக்கொண்டுள்ளான்.⁾

141 ⁽சிறியன் அடியேன்!␢ இழிவுக்கு உள்ளானவன்;␢ ஆனால், உம் நியமங்களை மறக்காதவன்.⁾

142 ₍உமது நீதி என்றுமுள நீதி;␢ உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.₎

143 ⁽துன்பமும் கவலையும்␢ என்னைப் பற்றிக்கொண்டன;␢ எனினும் உம் கட்டளைகள்␢ என்னை மகிழ்விக்கின்றன.⁾

144 ⁽உம் ஒழுங்குமுறைகள்␢ எக்காலமும் நீதியுள்ளவை;␢ நான் வாழுமாறு␢ எனக்கு நுண்ணறிவு புகட்டும்.⁾

145 ⁽முழு இதயத்தோடு␢ உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ ஆண்டவரே!␢ என் மன்றாட்டைக் கேட்டருளும்;␢ உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.⁾

146 ⁽உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ என்னைக் காத்தருளும்;␢ உம் ஒழுங்குமுறைகளை␢ நான் கடைப்பிடித்தேன்.⁾

147 ⁽வைகறையில் நான் உம்மிடம் வந்து␢ உதவிக்காக மன்றாடுகின்றேன்;␢ உம் சொற்களில்␢ நம்பிக்கை வைக்கின்றேன்.⁾

148 ⁽உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக,␢ இரவுச் சாம நேரங்களில்␢ நான் கண்விழித்துள்ளேன்.⁾

149 ⁽ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப␢ என் குரலைக் கேட்டருளும்;␢ உமது நீதியின்பபடி␢ என்னுயிரைக் காத்தருளும்.⁾

150 ⁽சதிசெய்து ஒடுக்குவோர்␢ என்னை நெருங்கி வருகின்றனர்;␢ உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும்␢ வெகு தொலைவு.⁾

151 ⁽ஆண்டவரே! நீர் என் அருகில்␢ இருக்கின்றீர்;␢ உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.⁾

152 ⁽அவற்றை நீர் எக்காலத்திற்குமாக␢ ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த␢ ஒழுங்குமுறைகளினின்று␢ முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.⁾

153 ⁽என் துன்ப நிலையைப் பார்த்து␢ என்னை விடுவித்தருளும்;␢ ஏனெனில், உமது திருச்சட்டத்தை␢ நான் மறக்கவில்லை.⁾

154 ⁽எனக்காக வழக்காடி␢ என்னை மீட்டருளும்;␢ உமது வாக்குக்கேற்றபடி␢ என் உயிரைக் காத்தருளும்.⁾

155 ⁽தீயோர்க்கு மீட்பு␢ வெகு தொலைவில் உள்ளது;␢ ஏனெனில், அவர்கள்␢ உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.⁾

156 ⁽ஆண்டவரே! உம் இரக்கம் மிகப் பெரியது;␢ உம் நீதித்தீர்ப்புகளின்படி␢ எனக்கு வாழ்வளியும்.⁾

157 ⁽என்னைக் கொடுமைப்படுத்துவோரும்␢ பகைப்போரும் பலர்;␢ ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு␢ நான் தவறுவதில்லை.⁾

158 ⁽துரோகம் செய்வோரை␢ அருவருப்புடன் பார்க்கின்றேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.⁾

159 ⁽ஆண்டவரே! நான் உம் கட்டளைகள்மீது␢ எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன்␢ என்பதைப் பாரும்;␢ உம் பேரன்பிற்கேற்ப␢ எனக்கு வாழ்வளியும்.⁾

160 ⁽உண்மையே உமது வார்த்தையின்␢ உட்பொருள்;␢ நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம்␢ என்றும் நிலைத்துள்ளன.⁾

161 ⁽தலைவர்கள் என்னைக் காரணமின்றிக்␢ கொடுமைப்படுத்துகின்றனர்;␢ ஆனால், உம் வாக்கை முன்னிட்டு␢ என் உள்ளம் நடுங்குகின்றது.⁾

162 ⁽திரண்ட கொள்ளைப் பொருளை␢ அடைந்தவன் மகிழ்வதுபோல␢ உமது வாக்குறுதியில்␢ நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾

163 ⁽பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்;␢ உமது திருச்சட்டத்தின்மீது␢ பற்றுக்கொண்டுள்ளேன்.⁾

164 ⁽நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து␢ ஒரு நாளைக்கு ஏழுமுறை␢ உம்மைப் புகழ்கின்றேன்.⁾

165 ⁽உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு␢ மிகுதியான நல்வாழ்வு உண்டு;␢ அவர்களை நிலைகுலையச் செய்வது␢ எதுவுமில்லை.⁾

166 ⁽ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக␢ நான் காத்திருக்கின்றேன்;␢ உம் கட்டளைகளைச்␢ செயல்படுத்துகின்றேன்.⁾

167 ⁽உம் ஒழுங்குமுறைகளை␢ நான் கடைப்பிடித்து வருகின்றேன்;␢ நான் அவற்றின்மீது␢ பற்றுக்கொண்டுள்ளேன்.⁾

168 ⁽உம் நியமங்களையும்␢ ஒழுங்குமுறைகளையும்␢ நான் கடைப்பிடிக்கின்றேன்;␢ ஏனெனில், என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவை.⁾

169 ⁽ஆண்டவரே! என் வேண்டுதல்␢ உம் திருமுன் வருவதாக!␢ உமது வாக்குறுதிக்கேற்ப␢ எனக்கு நுண்ணறிவு புகட்டும்.⁾

170 ⁽என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!␢ உம் வாக்குறுதியின்படி␢ என்னை விடுவியும்.⁾

171 ⁽உம் விதிமுறைகளை␢ எனக்கு நீர் கற்பிப்பதால்,␢ என் இதழ்களினின்று திருப்புகழ்␢ பொங்கிவரும்.⁾

172 ⁽உம் வாக்கைக் குறித்து␢ என் நா பாடுவதாக!␢ ஏனெனில், உம் கட்டளைகள்␢ எல்லாம் நீதியானவை.⁾

173 ⁽உம் கரம் எனக்குத்␢ துணையாய் இருப்பதாக!␢ ஏனெனில், உம் நியமங்களை␢ நான் தேர்ந்தெடுத்தேன்.⁾

174 ⁽ஆண்டவரே! உம்மிடமிருந்து␢ வரும் மீட்பை␢ நான் நாடுகின்றேன்;␢ உமது திருச்சட்டத்தில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.⁾

175 ⁽உயிர் பிழைத்து நான் ␢ உம்மைப் புகழ்வேனாக!␢ உம் நீதி நெறிகள் எனக்குத்␢ துணைபுரிவனவாக!⁾

176 ⁽காணாமல்போன ஆட்டைப் போல்␢ நான் அலைந்து திரிகின்றேன்;␢ உம் ஊழியனைத் தேடிப்பாரும்;␢ ஏனெனில், உம் கட்டளைகளை␢ நான் மறக்கவில்லை.⁾

Psalm 119 ERV IRV TRV