1 ⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾

2 ⁽ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;␢ அவர் பெயரை வாழ்த்துங்கள்;␢ அவர் தரும் மீட்பை␢ நாள்தோறும் அறிவியுங்கள்.⁾

3 ⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾

4 ⁽ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;␢ பெரிதும் போற்றத் தக்கவர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக␢ அஞ்சுதற்கு உரியவர் அவரே.⁾

5 ⁽மக்களினங்களின் தெய்வங்கள்␢ அனைத்தும் வெறும் சிலைகளே;␢ ஆண்டவரோ␢ விண்ணுலகைப் படைத்தவர்.⁾

6 ⁽மாட்சியும் புகழ்ச்சியும்␢ அவர் திருமுன் உள்ளன;␢ ஆற்றலும் எழிலும்␢ அவரது திருத்தலத்தில் உள்ளன;⁾

7 ⁽மக்களினங்களின் குடும்பங்களே,␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;␢ மாட்சியையும் ஆற்றலையும்␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.⁾

8 ⁽ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை␢ அவருக்குச் சாற்றுங்கள்;␢ உணவுப்படையல் ஏந்தி அவர்தம்␢ கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.⁾

9 ⁽தூய கோலத்துடன்␢ ஆண்டவரை வழிபடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ அவர் திருமுன் நடுங்குங்கள்.⁾

10 ⁽வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;␢ ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகு உறுதியாக␢ நிலைநிறுத்தப்பட்டுள்ளது;␢ அது அசைவுறாது;␢ அவர் மக்களினங்களை␢ நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.⁾

11 ⁽விண்ணுலகம் மகிழ்வதாக;␢ மண்ணுலகம் களிகூர்வதாக;␢ கடலும் அதில் நிறைந்துள்ளனவும்␢ முழங்கட்டும்.⁾

12 ⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾

13 ⁽ஏனெனில் அவர் வருகின்றார்;␢ மண்ணுலகிற்கு␢ நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;␢ நிலவுலகை நீதியுடனும்␢ மக்களினங்களை உண்மையுடனும்␢ அவர் தீர்ப்பிடுவார்.⁾

சங்கீதம் 96 ERV IRV TRV