1 ⁽ஆண்டவரே! உமது நாட்டின்மீது␢ அருள் கூர்ந்தீர்;␢ யாக்கோபினரை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.⁾

2 ⁽உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;␢ அவர்களின் பாவங்கள் அனைத்தையும்␢ மறைத்துவிட்டீர். (சேலா)⁾

3 ⁽உம் சினம் முழுவதையும்␢ அடக்கிக் கொண்டீர்;␢ கடும் சீற்றம் கொள்வதை␢ விலக்கிக் கொண்டீர்.⁾

4 ⁽எம் மீட்பராம் கடவுளே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;␢ எங்கள்மீது உமக்குள்ள சினத்தை␢ அகற்றிக்கொள்ளும்.⁾

5 ⁽என்றென்றுமா எங்கள்மேல் நீர்␢ சினம் கொள்வீர்?␢ தலைமுறைதோறுமா␢ உமது கோபம் நீடிக்கும்?⁾

6 ⁽உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,␢ எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?⁾

7 ⁽ஆண்டவரே, உமது பேரன்பை␢ எங்களுக்குக் காட்டியருளும்;␢ உமது மீட்பையும்␢ எங்களுக்குத் தந்தருளும்.⁾

8 ⁽ஆண்டவராம் இறைவன்␢ உரைப்பதைக் கேட்பேன்;␢ தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு␢ நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;␢ அவர்களோ மடமைக்குத்␢ திரும்பிச் செல்லலாகாது.⁾

9 ⁽அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ அவரது மீட்பு அண்மையில் உள்ளது␢ என்பது உறுதி; நம் நாட்டில்␢ அவரது மாட்சி குடிகொள்ளும்.⁾

10 ⁽பேரன்பும் உண்மையும்␢ ஒன்றையொன்று சந்திக்கும்;␢ நீதியும் நிறைவாழ்வும்␢ ஒன்றையொன்று முத்தமிடும்.⁾

11 ⁽மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;␢ விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.⁾

12 ⁽நல்லதையே ஆண்டவர் அருள்வார்;␢ நல்விளைவை நம்நாடு நல்கும்.⁾

13 ⁽நீதி அவர்முன் செல்லும்;␢ அவர்தம் அடிச்சுவடுகளுக்கு␢ வழி வகுக்கும்.⁾

சங்கீதம் 85 ERV IRV TRV