1 ⁽கடவுளே! என் கூக்குரலைக்␢ கேளும்; என்␢ விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.⁾

2 ⁽பூவுலகின் கடைமுனையினின்று␢ உம்மைக் கூப்பிடுகின்றேன்;␢ என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது;␢ உயரமான குன்றுக்கு § என்னை அழைத்துச் செல்லும்.⁾

3 ⁽ஏனெனில் நீரே என் புகலிடம்;␢ எதிரியின்முன் வலிமையான கோட்டை.⁾

4 ⁽நான் உமது கூடாரத்தில்␢ எந்நேரமும் தங்கியிருப்பேன்;␢ உமது இறக்கைகளின் பாதுகாப்பில்␢ தஞ்சம் புகுவேன். (சேலா)⁾

5 ⁽ஏனெனில், கடவுளே!␢ நான் செய்த பொருத்தனைகளை␢ நீர் அறிவீர்;␢ உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய␢ உடைமையை எனக்குத் தந்தீர்.⁾

6 ⁽அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்;␢ அவரது ஆயுள்␢ தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!⁾

7 ⁽கடவுள் முன்னிலையில் அவர்␢ என்றென்றும் வீற்றிருப்பாராக!␢ பேரன்போடும் உண்மையோடும்␢ அவரைக் காத்தருளும்!⁾

8 ⁽உமது பெயரை என்றென்றும்␢ புகழ்ந்து பாடுவேன்;␢ நாள்தோறும் என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾

சங்கீதம் 61 ERV IRV TRV