1 ⁽கடவுளே, உமது பெயரின்␢ வல்லமையால்␢ என்னைக் காப்பாற்றும்;␢ உமது ஆற்றலினால் எனது␢ நேர்மையை நிலைநாட்டும்.⁾

2 ⁽கடவுளே, என் விண்ணப்பத்தைக்␢ கேட்டருளும்;␢ என் வாயின் சொற்களுக்குச்␢ செவிகொடுத்தருளும்.⁾

3 ⁽ஏனெனில், செருக்குற்றோர்␢ எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;␢ கொடியவர் என் உயிரைப்␢ பறிக்கப் பார்க்கின்றனர்;␢ அவர்கள் கடவுளை␢ அறவே நினைப்பதில்லை. (சேலா)⁾

4 ⁽இதோ! கடவுள் எனக்குத்␢ துணைவராய் இருக்கின்றார்;␢ என் தலைவர் என் வாழ்வுக்கு␢ ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;⁾

5 ⁽என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும்␢ தீமையை அவர்கள் மேலேயே அவர் § திருப்பிவிடுவாராக!␢ ‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப␢ அவர்களை அழித்தொழியும்!⁾

6 ⁽தன்னார்வத்தோடு உமக்குப்␢ பலி செலுத்துவேன்;␢ ஆண்டவரே, உமது பெயருக்கு␢ நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’⁾

7 ⁽ஏனெனில், அவர் என்னை␢ எல்லா இன்னல்களினின்றும்␢ விடுவித்துள்ளார்;␢ என் எதிரிகளின் வீழ்ச்சியை நான்␢ கண்ணாரக் கண்டுள்ளேன்.⁾

சங்கீதம் 54 ERV IRV TRV