1 ⁽நான் ஆண்டவருக்காகப்␢ பொறுமையுடன் காத்திருந்தேன்;␢ அவரும் என் பக்கம் சாய்ந்து␢ எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.⁾

2 ⁽அழிவின் குழியிலிருந்து␢ என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;␢ சேறு நிறைந்த பள்ளத்தினின்று␢ தூக்கியெடுத்தார்;␢ கற்பாறையின்மேல் நான்␢ காலூன்றி நிற்கச் செய்தார்;␢ என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.⁾

3 ⁽புதியதொரு பாடலை,␢ நம் கடவுளைப் புகழும் பாடலை␢ என் நாவினின்று எழச் செய்தார்;␢ பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு␢ ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்;⁾

4 ⁽ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே␢ பேறு பெற்றவர்;␢ அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்;␢ பொய்யானவற்றைச் சாராதவர்.⁾

5 ⁽ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை␢ நீர் எமக்கெனச் செய்துள்ளீர்;␢ உமக்கு நிகரானவர் எவரும் இலர்;␢ என் கடவுளே!␢ உம் அருஞ்செயல்களும்␢ திட்டங்களும் எங்களுக்காகவே;␢ அவற்றை நான் எடுத்துரைக்க␢ விரும்புவேனாகில்␢ அவை எண்ணிலடங்கா.⁾

6 ⁽பலியையும் காணிக்கையையும்␢ நீர் விரும்பவில்லை;␢ எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும்␢ நீர் கேட்கவில்லை;␢ ஆனால், என் செவிகள்␢ திறக்கும்படி செய்தீர்.⁾

7 ⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾

8 ⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾

9 ⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾

10 ⁽உமது நீதியை நான்␢ என் உள்ளத்தின் ஆழத்தில்␢ மறைத்து வைக்கவில்லை;␢ உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்␢ நீர் அருளும் மீட்பைப் பற்றியும்␢ கூறியிருக்கின்றேன்;␢ உம் பேரன்பையும் உண்மையையும்␢ மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.⁾

11 ⁽ஆண்டவரே; உமது பேரிரக்கத்தை␢ எனக்குக் காட்ட மறுக்காதேயும்;␢ உமது பேரன்பும் உண்மையும்␢ தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!⁾

12 ⁽ஏனெனில், எண்ணிறிந்த தீமைகள்␢ எனைச் சூழ்ந்து கொண்டன;␢ என் குற்றங்கள் என்மீது கவிந்து␢ என் பார்வையை மறைத்துக்கொண்டன.␢ அவை என் தலைமுடிகளைவிட␢ மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து␢ என்னைக் கைவிட்டது.⁾

13 ⁽ஆண்டவரே, என்னை விடுவிக்க␢ மனமிசைந்தருளும்;␢ ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய␢ விரைந்து வாரும்.⁾

14 ⁽என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்␢ அனைவரும்␢ அவமானமும் குழப்பமும் அடையட்டும்!␢ என் கேட்டில் மகிழ்வுறுவோர்␢ தலைகுனிந்து பின்னடையட்டும்!⁾

15 ⁽என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர்␢ தாம் அடையும் தோல்வியினால்␢ அதிர்ச்சியுறட்டும்!⁾

16 ⁽உம்மைத் தேடுவோர் அனைவரும்␢ உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!␢ நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர்,␢ ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’␢ என்று எப்போதும் சொல்லட்டும்!⁾

17 ⁽நானோ ஏழை; எளியவன்;␢ என் தலைவர்␢ என்மீது அக்கறை கொண்டுள்ளார்;␢ நீரே என் துணைவர், என் மீட்பர்!␢ என் கடவுளே, எனக்குத்␢ துணை செய்ய விரைந்து வாரும்.⁾

சங்கீதம் 40 ERV IRV TRV