1 ⁽ஆண்டவரே, என்மீது␢ சினங்கொண்டு␢ என்னைக் கண்டியாதேயும்;␢ என் மீது சீற்றம்கொண்டு␢ என்னைத் தண்டியாதேயும்;⁾

2 ⁽ஏனெனில், உம் அம்புகள்␢ என்னுள் பாய்ந்திருக்கின்றன;␢ உமது கை என்னை␢ அழுத்திக் கொண்டிருக்கின்றது.⁾

3 ⁽நீர் கடுஞ்சினங்கொண்டதால்␢ என் உடலில் நலமே இல்லை;␢ என் பாவத்தால் என் எலும்புகளில்␢ வலுவே இல்லை.⁾

4 ⁽என் குற்றங்கள் தலைக்குமேல்␢ போய்விட்டன;␢ தாங்கவொண்ணாச் சுமைபோல␢ அவை என்னை வெகுவாய் § அழுத்துகின்றன.⁾

5 ⁽என் புண்கள் அழுகி␢ நாற்றமெடுக்கின்றன;␢ என் மதிகேடுதான்␢ இதற்கெல்லாம் காரணம்.⁾

6 ⁽நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்;␢ நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.⁾

7 ⁽என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று;␢ என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.⁾

8 ⁽நான் வலுவற்றுப் போனேன்;␢ முற்றிலும் நொறுங்கிப்போனேன்;␢ என் உள்ளக் கொதிப்பினால்␢ கதறுகின்றேன்.⁾

9 ⁽என் தலைவரே, என் பெருமூச்செல்லாம்␢ உமக்குத் தெரியும்;␢ என் வேதனைக் குரல்␢ உமக்கு மறைவாயில்லை.⁾

10 ⁽என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது;␢ என் வலிமை என்னைவிட்டு அகன்றது;␢ என் கண்களும்கூட ஒளி இழந்தன.⁾

11 ⁽என் நண்பர்களும் தோழர்களும்␢ நான் படும் வாதை கண்டு␢ விலகி நிற்கின்றனர்;␢ என் உறவினரும் என்னைவிட்டு␢ ஒதுங்கி நிற்கின்றனர்.⁾

12 ⁽என் உயிரைப் பறிக்கத்தேடுவோர்␢ எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;␢ எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர்␢ என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்;␢ எப்போதும் எனக்கெதிராய்ச்␢ சூழ்ச்சி செய்கின்றனர்.⁾

13 ⁽நானோ செவிடர்போல் காது கேளாமலும்␢ ஊமைபோல் வாய் திறவாமலும் § இருக்கின்றேன்.⁾

14 ⁽உண்மையாகவே, நான்␢ செவிப்புலனற்ற மனிதர் போலும்␢ மறுப்புரை கூறாத␢ நாவினர் போலும் ஆனேன்;⁾

15 ⁽ஏனெனில் ஆண்டவரே,␢ நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்;␢ என் தலைவராகிய கடவுளே,␢ செவிசாய்த்தருளும்.⁾

16 ⁽‛அவர்கள் என்னைப் பார்த்துக்␢ களிக்க விடாதேயும்;␢ என் கால் தடுமாறினால் அவர்கள்␢ பெருமை கொள்வர்’ என்று சொன்னேன்.⁾

17 ⁽நான் தடுமாறிவிழும் நிலையில்␢ இருக்கின்றேன்;␢ நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.⁾

18 ⁽என் குற்றத்தை நான்␢ அறிக்கையிடுகின்றேன்;␢ என் பாவத்தின் பொருட்டு␢ நான் அஞ்சுகின்றேன்.⁾

19 ⁽காரணமின்றி என்னைப் பகைப்போர்␢ வலுவாய் உள்ளனர்;␢ வீணாக என்னை வெறுப்போர்␢ பலராய் உள்ளனர்;⁾

20 ⁽நன்மைக்குப் பதிலாக அவர்கள்␢ எனக்குத் தீமை செய்கின்றனர்;␢ நன்மையே நாடும் என்னைப்␢ பகைக்கின்றனர்;⁾

21 ⁽ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்;␢ என் கடவுளே!␢ என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.⁾

22 ⁽என் தலைவரே! மீட்பரே!␢ எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.⁾

சங்கீதம் 38 ERV IRV TRV