1 ⁽ஆண்டவரே! நான் உம்மை␢ நோக்கிக் கதறுகின்றேன்;␢ விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.␢ உம்மை நோக்கி நான்␢ வேண்டுதல் செய்யும்போது␢ என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.⁾

2 ⁽தூபம்போல் என் மன்றாட்டு␢ உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக!␢ மாலைப் பலிபோல் என் கைகள்␢ உம்மை நோக்கி உயர்வனவாக!⁾

3 ⁽ஆண்டவரே! என் நாவுக்குக்␢ காவல் வைத்தருளும்;␢ என் இதழ்களின் வாயிலில்␢ காவலாளியை வைத்தருளும்.⁾

4 ⁽என் இதயம் தீயது எதையும்␢ நாடவிடாதேயும்;␢ தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;␢ தீச்செயல் செய்யும் மனிதரோடு␢ என்னைச் சேரவிடாதேயும்;␢ அவர்களோடு இனிய விருந்தினை␢ நான் உண்ணவிடாதேயும்.⁾

5 ⁽நீதிமான் என்னைக் கனிவோடு␢ தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு␢ எண்ணெய்போல் ஆகும்;␢ ஆனால், தீயவரின் எண்ணெய்␢ என்றுமே என் தலையில்␢ படாமல் இருக்கட்டும்;␢ ஏனெனில், அவர்கள் செய்யும்␢ தீமைகளுக்கு எதிராய்␢ நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.⁾

6 ⁽அவர்கள் நீதிபதிகளிடம்␢ தண்டனைக்கென␢ ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது␢ எவ்வளவு உண்மையானது என்று␢ ஏற்றுக் கொள்வார்கள்;⁾

7 ⁽‛ஒருவரால் பாறை பிளந்து␢ சிதறடிக்கப்படுவது போல்,␢ எங்கள் எலும்புகளும்␢ பாதாளத்தின் வாயிலில்␢ சிதறடிக்கப்படும்’ என்பார்கள்.⁾

8 ⁽ஏனெனில், என் தலைவராகிய␢ ஆண்டவரே! என் கண்கள்␢ உம்மை நோக்கியே இருக்கின்றன;␢ உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;␢ என் உயிரை அழியவிடாதேயும்.⁾

9 ⁽அவர்கள் எனக்கு வைத்த␢ கண்ணிகளிலிருந்து␢ என்னைக் காத்தருளும்;␢ தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்.⁾

10 ⁽தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்␢ ஒருங்கே வந்து விழுவார்களாக!␢ நானோ தடையின்றிக்␢ கடந்து செல்வேனாக!⁾

சங்கீதம் 141 ERV IRV TRV