1 ⁽ஆண்டவரே! ஆழ்ந்த␢ துயரத்தில் இருக்கும் நான்␢ உம்மை நோக்கி␢ மன்றாடுகிறேன்;⁾

2 ⁽ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் விண்ணப்பக் குரலை␢ உம்முடைய செவிகள்␢ கவனத்துடன் கேட்கட்டும்.⁾

3 ⁽ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை␢ மனத்தில் கொண்டிருந்தால்,␢ யார்தான் நிலைத்து நிற்க முடியும்?⁾

4 ⁽நீரோ மன்னிப்பு அளிப்பவர்;␢ மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.⁾

5 ⁽ஆண்டவருக்காக ஆவலுடன் நான்␢ காத்திருக்கின்றேன்;␢ என் நெஞ்சம் காத்திருக்கின்றது;␢ அவரது சொற்களுக்காக␢ ஆவலுடன் காத்திருக்கின்றேன்.⁾

6 ⁽விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ என் நெஞ்சம் என் தலைவருக்காய்␢ ஆவலுடன் காத்திருக்கின்றது.⁾

7 ⁽இஸ்ரயேலே!␢ ஆண்டவரையே நம்பியிரு;␢ பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;␢ மிகுதியான மீட்பு␢ அவரிடமே உண்டு.⁾

8 ⁽எல்லாத் தீவினைகளினின்றும்␢ இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!⁾

சங்கீதம் 130 ERV IRV TRV