1 ⁽விண்ணுலகில் வீற்றிருப்பவரே!␢ உம்மை நோக்கியே என்␢ கண்களை உயர்த்தியுள்ளேன்.⁾

2 ⁽பணியாளனின் கண்கள்␢ தன் தலைவனின் கைதனை␢ நோக்கியிருப்பதுபோல,␢ பணிப்பெண்ணின் கண்கள்␢ தன் தலைவியின் கைதனை␢ நோக்கியிருப்பதுபோல,␢ எம் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எமக்கு இரங்கும்வரை,␢ எம் கண்கள்␢ உம்மையே நோக்கியிருக்கும்.⁾

3 ⁽எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே!␢ எங்களுக்கு இரங்கும்;␢ அளவுக்கு மேலேயே நாங்கள்␢ இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.⁾

4 ⁽இன்பத்தில் திளைத்திருப்போரின் ␢ வசைமொழி போதும். ␢ இறுமாந்த மனிதரின்␢ பழிச்சொல்லும் போதும்.⁾

சங்கீதம் 123 ERV IRV TRV