1 பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

2 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே: § வடக்கினின்று வெள்ளம்␢ பொங்கி எழுகின்றது;␢ கரை புரண்டோடும் காட்டாறென␢ அது மாறுகின்றது.␢ நாட்டையும் அதில் உள்ள␢ அனைத்தையும்␢ நகரையும் அதன் குடிகளையும்␢ மூழ்கடிக்கும்.␢ மனிதர் கூக்குரலிடுவர்; § நாட்டு மக்கள் அனைவரும்␢ ஓலமிடுவர்.⁾

3 ⁽போர்க் குதிரைகளின்␢ குளம்பொலியையும்␢ தேர்களின் இரைச்சலையும்␢ அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு,␢ தந்தையர் கை சோர்ந்தமையால்␢ தம் குழந்தைகளையும் § திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.⁾

4 ⁽பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள்,␢ தீர், சீதோனும் அவற்றின்␢ எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும்␢ ஒழியும் நாள் நெருங்கிவிட்டது.␢ ஆண்டவர் பெலிஸ்தியரையும்␢ கப்தோர் தீவின் எஞ்சியோரையும் § அழிக்கவிருக்கிறார்.⁾

5 ⁽காசா மொட்டையடிக்கப்படும்;␢ அஸ்கலோன் அழிக்கப்படும்;␢ அனாக்கியருள்* எஞ்சியிருப்போரே,␢ எத்துணைக் காலம் நீங்கள்␢ உங்களையே␢ காயப்படுத்திக் கொள்வீர்கள்?⁾

6 ⁽ஓ, ஆண்டவரின் வாளே!␢ என்று நீ ஓய்ந்திருப்பாய்?␢ நீ உன் உறைக்குள் செல்!␢ அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு.⁾

7 ⁽ஆண்டவர் அதற்குக்␢ கட்டளை கொடுத்திருக்கிறார்;␢ அது* எப்படி ஓய்ந்திருக்க முடியும்?␢ அஸ்கலோனுக்கும்␢ கடற்கரைப் பகுதிக்கும் எதிராக␢ அவர் அதற்குப் பணி␢ குறித்து வைத்துள்ளாரே!⁾

எரேமியா 47 ERV IRV TRV