1 ⁽ஆண்டவராகிய என் தலைவரின்␢ ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள் பொழிவு செய்துள்ளார்;␢ ஒடுக்கப்பட்டோருக்கு␢ நற்செய்தியை அறிவிக்கவும்,␢ உள்ளம் உடைந்தோரைக்␢ குணப்படுத்தவும்,␢ சிறைப்பட்டோருக்கு␢ விடுதலையைப் பறைசாற்றவும்,␢ கட்டுண்டோருக்கு␢ விடிவைத் தெரிவிக்கவும்␢ என்னை அனுப்பியுள்ளார்.⁾

2 ⁽ஆண்டவர் அருள்தரும்␢ ஆண்டினை முழங்கவும்,␢ நம் கடவுள் அநீதிக்குப்␢ பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,␢ துயருற்று அழுவோர்க்கு␢ ஆறுதல் அளிக்கவும்,⁾

3 ⁽சீயோனில் அழுவோர்க்கு␢ ஆவன செய்யவும்,␢ சாம்பலுக்குப் பதிலாக␢ அழகுமாலை அணிவிக்கவும்,␢ புலம்பலுக்குப் பதிலாக␢ மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும்,␢ நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப்␢ ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும்␢ என்னை அனுப்பியுள்ளார்.␢ ‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும்␢ ‘தாம் மாட்சியுறுமாறு␢ ஆண்டவர் நட்டவை’ என்றும்␢ அவர்கள் பெயர் பெறுவர்.⁾

4 ⁽நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை␢ அவர்கள் கட்டியெழுப்புவார்கள்;␢ முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை␢ நிலைநிறுத்துவார்கள்;␢ தலைமுறை தலைமுறையாக␢ இடிந்து அழிந்துகிடந்த நகர்களைச்␢ சீராக்குவார்கள்.⁾

5 ⁽அன்னியர் உங்கள் மந்தையை␢ மேய்த்து நிற்பர்;␢ வேற்று நாட்டு மக்கள்␢ உங்கள் உழவராயும்␢ திராட்சைத் தோட்டப்␢ பணியாளராயும் இருப்பர்.⁾

6 ⁽நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று␢ அழைக்கப்படுவீர்கள்;␢ நம் கடவுளின் திருப்பணியாளர் என்று␢ பெயர் பெறுவீர்கள்;␢ பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு␢ நீங்கள் உண்பீர்கள்;␢ அவர்களின் சொத்தில்␢ நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.⁾

7 ⁽அவமானத்திற்குப் பதிலாக நீங்கள்␢ இருபங்கு நன்மை அடைவீர்கள்;␢ அவமதிப்புக்குப் பதிலாக␢ உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்;␢ ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம்␢ இருமடங்காகும்;␢ முடிவில்லா மகிழ்ச்சியும்␢ உங்களுக்கு உரியதாகும்.⁾

8 ⁽ஆண்டவராகிய நான்␢ நீதியை விரும்புகின்றேன்;␢ கொள்ளையையும் குற்றத்தையும்␢ வெறுக்கின்றேன்;␢ அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை␢ உண்மையாகவே வழங்குவேன்;␢ அவர்களுடன் முடிவில்லா␢ உடன்படிக்கை செய்து கொள்வேன்;⁾

9 ⁽அவர்கள் வழிமரபினர்␢ பிறஇனத்தாரிடையேயும்,␢ அவர்கள் வழித்தோன்றல்கள்␢ மக்களினங்கள் நடுவிலும்␢ புகழ் அடைவார்கள்;␢ அவர்களைக் காண்பவர் யாவரும்␢ அவர்களை ஆண்டவரின்␢ ஆசிபெற்ற வழிமரபினர் என␢ ஏற்றுக்கொள்வார்கள்.⁾

10 ⁽ஆண்டவரில் நான்␢ பெருமகிழ்ச்சி அடைவேன்;␢ என் கடவுளில்␢ என் உள்ளம் பூரிப்படையும்;␢ மலர்மாலை அணிந்த மணமகன் போலும்,␢ நகைகளால் அழகுபடுத்தப்பட்ட␢ மணமகள் போலும்,␢ விடுதலை என்னும் உடைகளை␢ அவர் எனக்கு உடுத்தினார்;␢ நேர்மை என்னும் ஆடையை␢ எனக்கு அணிவித்தார்.⁾

11 ⁽நிலம் முளைகளைத்␢ துளிர்க்கச் செய்வது போன்றும்,␢ தோட்டம் விதைகளை␢ முளைக்கச் செய்வது போன்றும்,␢ ஆண்டவராகிய என் தலைவர்␢ பிற இனத்தார் பார்வையில்␢ நேர்மையும் புகழ்ச்சியும்␢ துளிர்த்தெழச் செய்வார்.⁾

ஏசாயா 61 ERV IRV TRV