1 ⁽யாக்கோபின் வீட்டாரே! இதற்குச்␢ செவிகொடுங்கள்;␢ நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால்␢ அழைக்கப்படுகிறீர்கள்;␢ யூதாவெனும் ஊற்றினின்று␢ தோன்றியுள்ளீர்கள்;␢ ஆண்டவரின் பெயரால்␢ ஆணையிடுகின்றீர்கள்;␢ இஸ்ரயேலின் கடவுளைப்␢ புகழ்கின்றீர்கள்.␢ ஆயினும், உண்மையுடனும்␢ நேர்மையுடனும்␢ இவற்றைச் செய்வதில்லை.⁾

2 ⁽‘திரு நகரினர்’ என்று உங்களைப் பற்றிச்␢ சொல்லிக்கொள்கின்றீர்கள்;␢ இஸ்ரயேலின் கடவுளையே␢ சார்ந்து நிற்கின்றீர்கள்;␢ ‘படைகளின் ஆண்டவர்’ என்பது␢ அவர்தம் பெயராம்!⁾

3 ⁽பண்டைய நிகழ்ச்சிகளை␢ முன்கூட்டியே அறிவித்தேன்;␢ என் வாய் மொழிந்தவற்றை␢ அவர்கள் கேட்கச் செய்தேன்;␢ திடீரெனச் செயல்பட்டேன்;␢ யாவும் நிகழ்ந்தன.⁾

4 ⁽நீ பிடிவாத குணமுடையவன்;␢ உன் கழுத்து இரும்புத் தசைநார்;␢ உன் நெற்றி வெண்கலம்;␢ இதை நான் அறிவேன்.⁾

5 ⁽எனவே அவற்றை முன்கூட்டியே␢ உனக்கு அறிவித்தேன்;␢ அவை நிகழ்வதற்குமுன்␢ உனக்குத் தெரியப்படுத்தினேன்;␢ ‘என் சிலை அவற்றைச் செய்தது;␢ நான் வார்த்த வடிவமும்␢ செதுக்கிய உருவமும்␢ அவற்றைக் கட்டளையிட்டன’ என்று␢ நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.⁾

6 ⁽முன்பு நீ கேட்டாய்; இப்போது␢ அவை அனைத்தையும் காண்கின்றாய்;␢ அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ?␢ இதுமுதல் புதியனவற்றையும்␢ நீ அறியாத மறைபொருள்களையும்␢ உனக்கு வெளிப்படுத்துவேன்.⁾

7 ⁽பண்டைக்காலத்தில் அல்ல,␢ அவை இப்பொழுதுதான்␢ உருவாக்கப்பட்டன;␢ இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை;␢ அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை;␢ ‘அவைபற்றி எனக்குத் தெரியும்’ என␢ நீ கூறவும் முடியாது.⁾

8 ⁽உண்மையிலே நீ␢ கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை;␢ முன்பிருந்தே உன் செவிகள்␢ திறந்திருக்கவில்லை;␢ ஏனெனில், நீ ‘ஏமாற்றுப் பேர்வழி,␢ கருப்பையிலிருந்தே கலகக்காரன்’␢ என்று பெயர்பெற்றவன்;␢ இதை நான் உறுதியாய் அறிவேன்.⁾

9 ⁽என் பெயரின் பொருட்டு␢ என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்;␢ என் புகழை முன்னிட்டு␢ உன்னை வெட்டி வீழ்த்தாமல்,␢ உனக்காக அதைக்␢ கட்டுப்படுத்துகின்றேன்.⁾

10 ⁽நான் உன்னைப் புடமிட்டேன்;␢ ஆனால், வெள்ளியைப் போலல்ல;␢ துன்பம் எனும் உலை வழியாய்␢ உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.⁾

11 ⁽என்பொருட்டே, என்னை முன்னிட்டே␢ அதைச் செய்கின்றேன்;␢ என் பெயரை␢ எங்ஙனம் களங்கப்படுத்தலாம்?␢ என் மாட்சியை நான்␢ எவருக்கும் விட்டுக்கொடேன்.⁾

12 ⁽நான் அழைத்திருக்கும் யாக்கோபே,␢ இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு;␢ நானே அவர்; தொடக்கமும் நானே;␢ முடிவும் நானே.⁾

13 ⁽என் கையே மண்ணுலகிற்கு␢ அடித்தளமிட்டது;␢ என் வலக்கை␢ விண்ணுலகை விரித்து வைத்தது.␢ நான் அழைக்கும்போது␢ அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.⁾

14 ⁽நீங்கள் அனைவரும்␢ கூடிவந்து கேளுங்கள்;␢ அவர்களுள் இவற்றை␢ அறிவித்தவர் யார்?␢ ஆண்டவரின் அன்புக்குரியவன்,␢ பாபிலோனில் அவர் விரும்பியதைச்␢ செய்வான்; அவன் புயம்␢ கல்தேயருக்கு எதிராக எழும்.⁾

15 ⁽நான், நானேதான்␢ அதைக் கூறினேன்;␢ நான் அவனை அழைத்தேன்;␢ நானே அவனைக்கொண்டு வந்தேன்,␢ அவன் தன்வழியில்␢ வெற்றி காண்பான்.⁾

16 ⁽என் அருகில் வந்து␢ இதைக் கேளுங்கள்;␢ தொடக்கமுதல் நான்␢ மறைவாகப் பேசியதில்லை;␢ அது நிகழ்ந்த காலம் முதல்,␢ நான் அங்கே இருக்கின்றேன்.␢ இப்பொழுது␢ என் தலைவராகிய ஆண்டவர்␢ என்னையும் அவர்தம் ஆவியையும்␢ அனுப்பியுள்ளார்.⁾

17 ⁽இஸ்ரயேலின் தூயவரும்␢ உன் மீட்பருமான ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!␢ பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும்␢ செல்லவேண்டிய வழியில்␢ உன்னை நடத்துபவரும் நானே!⁾

18 ⁽என் கட்டளைக்குச்␢ செவிசாய்த்திருப்பாயானால்,␢ உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும்,␢ உன் வெற்றி கடல் அலை போலும்,␢ பாய்ந்து வந்திருக்கும்.⁾

19 ⁽உன் வழிமரபினர் மணல் அளவாயும்,␢ உன் வழித்தோன்றல்கள்␢ கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்;␢ அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்;␢ அவர்கள் பெயர் என் திருமுன்னின்று␢ அழிக்கப்பட்டிராது.⁾

20 ⁽பாபிலோனிலிருந்து␢ புறப்பட்டுச் செல்லுங்கள்;␢ கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்;␢ ஆரவாரக் குரலெழுப்பி␢ இதை முழங்கி அறிவியுங்கள்;␢ உலகின் எல்லைவரை␢ இதை அறியச் செய்யுங்கள்;␢ ‘தம் ஊழியன் யாக்கோபை␢ ஆண்டவர் மீட்டுவிட்டார்’ என்று␢ சொல்லுங்கள்.⁾

21 ⁽அவர் அவர்களைப் பாலைநிலங்களில்␢ நடத்திச் சென்றபோது␢ அவர்கள் தாகமடையவில்லை;␢ பாறையிலிருந்து அவர்களுக்கு␢ நீர் சுரக்கச் செய்தார்;␢ பாறையைப் பிளந்தார்,␢ நீர் பாய்ந்து வந்தது.⁾

22 ⁽‘தீயோர்க்கு அமைதி இல்லை’␢ என்கிறார் ஆண்டவர்.⁾

ஏசாயா 48 ERV IRV TRV