1 ⁽மகள் பாபிலோனே, கன்னிப்␢ பெண்ணே!␢ நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்;␢ மகள் கல்தேயா! அரியணையில் அன்று,␢ தரையினில் அமர்ந்திடு;␢ ‘மெல்லியலாள்’, ‘இனியவள்’ என்று␢ இனி நீ அழைக்கப்படாய்.⁾

2 ⁽எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை;␢ உன் முக்காடுதனை அகற்றிவிடு;␢ உன் மேலாடையைக் களைந்துவிட்டு,␢ உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.⁾

3 ⁽உன் பிறந்தமேனி திறக்கப்படும்;␢ உன் மானக்கேடு வெளிப்படும்;␢ நான் பழி வாங்குவேன்;␢ எந்த ஆளையும் விட்டுவையேன்.⁾

4 ⁽எங்கள் மீட்பரின் பெயர்␢ ‘படைகளின் ஆண்டவர்’;␢ அவரே ‘இஸ்ரயேலின் தூயவர்’.⁾

5 ⁽மகள் கல்தேயா!␢ இருளுக்குள் புகுந்து␢ மௌனமாய் உட்கார்;␢ இனி நீ ‘அரசுகளின் தலைவி’ என␢ அழைக்கப்படமாட்டாய்.⁾

6 ⁽நான் என் மக்கள் மீது␢ சினமுற்றிருந்தேன்;␢ என் உரிமைச் சொத்தைக்␢ களங்கப்படுத்தினேன்;␢ அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்;␢ நீயோ அவர்களுக்குக்␢ கருணை காட்டவில்லை;␢ முதியோராய் இருந்தோர் மீதும்␢ மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.⁾

7 ⁽‘என்றும் தலைவி நானே, என்றாய் நீ;␢ இவற்றை நீ உன் சிந்தையில்␢ கொள்ளவில்லை;␢ பின் விளைவுபற்றி␢ எண்ணிப் பார்க்கவுமில்லை.⁾

8 ⁽இன்ப நாட்டம் கொண்டவளே,␢ போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே,␢ ‘எனக்கு நிகர் நானே,␢ வேறு எவருமில்லை;␢ நான் கைம்பெண் ஆகமாட்டேன்;␢ பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்’ என்று␢ தனக்குள் சொல்லிக் கொள்பவளே,␢ இப்பொழுது இதைக் கேள்:⁾

9 ⁽இவை இரண்டும் திடீரென␢ ஒரே நாளில் உனக்கு நேரிடும்;␢ பில்லி சூனியங்கள் பலவற்றை␢ நீ கையாண்டாலும்,␢ ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும்,␢ பிள்ளை இழப்பும் கைம்மையும்␢ முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.⁾

10 ⁽உன் தீச்செயலில்␢ நீ நம்பிக்கை வைத்தாய்;␢ ‘என்னைக் காண்பார்␢ யாருமில்லை’ என்றாய்.␢ உன் ஞானமும் உன் அறிவுத்திறனும்␢ உன்னை நெறிபிறழச் செய்தன;␢ ‘எனக்கு நிகர் நானே,␢ வேறு எவருமில்லை’ என்று␢ உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.⁾

11 ⁽தீமை உன்மேல் திண்ணமாய் வரும்;␢ அது தோன்றும் திக்கை நீ அறியாய்;␢ அழிவு உன்மேல் விழும்;␢ அதற்கு கழுவாய் தேட␢ உன்னால் இயலாது;␢ நீ அறியாத பேரழிவு␢ திடீரென உன்மேல் வரும்.⁾

12 ⁽இளமை முதல் நீ முயன்று பயின்ற␢ உன் மந்திரங்களோடும்␢ பில்லி சூனியங்களோடும் வந்து நில்;␢ ஒருவேளை உன்னால்␢ சிறிது வெற்றி பெற முடியும்;␢ ஒருவேளை உன் எதிரியை␢ அச்சுறுத்த முடியும்.⁾

13 ⁽திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்;␢ வான்வெளியைக் கணிப்போரும்,␢ விண்மீன்களை ஆய்வோரும்␢ நிகழவிருப்பதை அமாவாசைகளில்␢ உனக்கு முன்னுரைப்போரும்,␢ வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.⁾

14 ⁽இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள்,␢ நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்;␢ தீப்பிழம்பினின்று தம் உயிரைக்␢ காத்துக்கொள்ள மாட்டார்கள்;␢ அது குளிர்காயப் பயன்படும்␢ தணல் அன்று;␢ எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.⁾

15 ⁽நீ முயன்று பயின்றவையும்␢ இவ்வாறே அழிவுறும்;␢ உன் இளமை முதல்␢ நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும்§ இதுவே நேரும்;␢ ஒவ்வொருவரும் தம் போக்கிலே␢ அலைந்து திரிவார்;␢ உன்னை விடுவிக்க எவரும் இரார்.⁾

ஏசாயா 47 ERV IRV TRV