1 ⁽இதோ, ஆண்டவர் பூவுலகை␢ வெறுமையாக்கிப் பாழடையச்␢ செய்து, அதன் நிலப்பரப்பை␢ உருக்குலையச் செய்து,␢ அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார்.⁾

2 ⁽அப்பொழுது மக்களுக்கு எப்படியோ␢ அப்படியே குருக்களுக்கும்,␢ பணியாளனுக்கு எவ்வாறோ␢ அவ்வாறே அவன் தலைவனுக்கும்,␢ பணிப்பெண்ணுக்கு எப்படியோ␢ அப்படியே அவள் தலைவிக்கும்,␢ வாங்குபவனுக்கு எவ்வாறோ␢ அவ்வாறே விற்பவனுக்கும்,␢ கடன் கொடுப்பவனுக்கு எப்படியோ␢ அப்படியே கடன் வாங்குபவனுக்கும்,␢ வட்டிக்குக் கொடுத்தவனுக்கு எவ்வாறோ␢ அவ்வாறே வட்டிக்கு␢ வாங்கினவனுக்கும் நேரிடும்.⁾

3 ⁽நாடு முற்றிலும் பாழடைந்து போகும்;␢ முழுவதும் சூறையாடப்படும்.␢ ஏனெனில், இது␢ ஆண்டவர் கூறிய வார்த்தை.⁾

4 ⁽நிலம் புலம்பி வாடுகின்றது.␢ மண்ணுலகம் தளர்ந்து வாடுகின்றது,␢ மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர்␢ தளர்ச்சியுறுவர்.⁾

5 ⁽நாடு அதில் குடியிருப்போரால்␢ தீட்டுப்பட்டுள்ளது; ஏனெனில்␢ அவர்கள் சட்டங்களை மீறினார்கள்;␢ நியமங்களைச் சீர்குலைத்தார்கள்;␢ என்றுமுள உடன்படிக்கையை␢ முறித்தார்கள்.⁾

6 ⁽ஆதலால், சாபம்␢ நாட்டை விழுங்குகிறது.␢ அதில் குடியிருப்போர்␢ குற்றப்பழியில் சிக்கியுள்ளனர்.␢ அதில் வாழ்வோர்␢ நெருப்பில் எரிந்து போகின்றனர்;␢ சிலரே எஞ்சியிருப்பர்.⁾

7 ⁽திராட்சை இரசம் அழுகின்றது;␢ திராட்சைக் கொடி தளர்கின்றது;␢ அக்களிக்கும் இதயங்களெல்லாம்␢ பெருமூச்சு விடுகின்றன.⁾

8 ⁽மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது.␢ அக்களித்திருந்தோரின்␢ ஆரவாரம் அடங்கிவிட்டது;␢ யாழின் இன்னிசை நின்றுவிட்டது.⁾

9 ⁽பாடலுடன் அவர்கள்␢ திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்;␢ மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.⁾

10 ⁽குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது;␢ யாரும் நுழையாதபடி␢ வீடெல்லாம் பூட்டப்பட்டது.⁾

11 ⁽திராட்சை இரசத்திற்காகத்␢ தெருக்களில் கூச்சல் எழுகின்றது;␢ மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது;␢ விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.⁾

12 ⁽பாழடைந்த நிலையே␢ நகரில் எஞ்சியிருக்கின்றது;␢ நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும்␢ பாழாய்க் கிடக்கின்றன.⁾

13 ⁽நாட்டில் மக்களுக்கு நேரிடுவது␢ ஒலிவமரத்தை உலுக்குவது போலவும்,␢ அறுவடைக்குத் தப்பிய␢ திராட்சைப் பழங்களைப்␢ பறிப்பது போலவும் உள்ளது.⁾

14 ⁽எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி␢ மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்;␢ ஆண்டவரின் மாட்சி பற்றி␢ மேற்கிலிருந்து␢ ஆரவாரம் செய்கின்றார்கள்.⁾

15 ⁽ஆதலால் கீழ்த்திசையில்␢ ஆண்டவரைப் பெருமைப் படுத்துங்கள்;␢ கடற்கரை நாடுகளில்␢ இஸ்ரயேலின் கடவுளாகிய␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾

16 ⁽மண்ணுலகின் எல்லையிலிருந்து␢ ‘நீதியுள்ளவருக்கு மாட்சி’ என்ற␢ புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்;␢ நானோ, “இளைத்துப் போனேன்,␢ இளைத்துப் போனேன்,␢ எனக்கு ஐயோ, கேடு;␢ எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்;␢ துரோகிகள்␢ நம்பிக்கைத் துரோகம்␢ செய்கின்றார்கள்” என்றேன்.⁾

17 ⁽உலகில் குடியிருப்போரே,␢ திகில், படுகுழி, கண்ணி,␢ உங்களுக்கெதிரில் இருக்கின்றன.⁾

18 ⁽திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர்␢ படுகுழியில் வீழ்வார்;␢ படுகுழியிலிருந்து ஏறுகின்றவர்␢ கண்ணியில் சிக்கிக் கொள்வார்;␢ ஏனெனில், விண்ணின் மடைகள்␢ திறக்கப்படுகின்றன;␢ நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.⁾

19 ⁽பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது;␢ நிலவுலகம் பிளந்து விரிகின்றது;␢ மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது.⁾

20 ⁽குடிவெறியரைப் போல்␢ மண்ணுலகம் தள்ளாடுகின்றது;␢ குடிசைபோல் அது␢ இடம் பெயர்ந்து செல்கின்றது;␢ அதன் குற்றப்பழி பாரச்சுமையாய்␢ அதை அழுத்துகின்றது;␢ அது வீழ்ச்சியடையும்;␢ இனி ஒருபோதும் எழாது.⁾

21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும் நிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.

22 கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்; சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவார்கள். நாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்கள்.

23 நிலா நாணமுறுவாள்; கதிரவன் வெட்கமடைவான்; ஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் அரசாள்வார். அவர்களின் பெரியோர் முன்னிலையில் அவர்தம் மாட்சி வெளிப்படும்.

ஏசாயா 24 ERV IRV TRV