1 ⁽இஸ்ரயேலே! உன் கடவுளாகிய␢ ஆண்டவரிடம் திரும்பி வா;␢ நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.⁾

2 ⁽இம்மொழிகளை ஏந்தி␢ ஆண்டவரிடம் திரும்பி வந்து␢ இவ்வாறு சொல்லுங்கள்:␢ “தீவினை அனைத்தையும் § அகற்றியருளும்,␢ நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்;␢ நாங்கள் எங்கள் வாய்மொழியாம்␢ கனிகளை உமக்கு அளிப்போம்;⁾

3 ⁽அசீரியர் எங்களை␢ விடுவிக்கமாட்டார்கள்;␢ குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்;␢ எங்கள் கைவினைப் § பொருள்களை நோக்கி,␢ ‘எங்கள் கடவுளே!’ என்று␢ இனிச் சொல்லமாட்டோம்;␢ திக்கற்றவன் உம்மிடத்தில்␢ பரிவைப் பெறுகிறான்” § எனச் சொல்லுங்கள்.⁾

4 ⁽அவர்களுடைய § பற்றுறுதியின்மையை␢ நான் குணமாக்குவேன்;␢ அவர்கள்மேல் உளமார␢ அன்பு கூர்வேன்.␢ அவர்கள் மேலிருந்த என் சினம்␢ தணிந்துவிட்டது.⁾

5 ⁽நான் இஸ்ரயேலுக்குப்␢ பனி போலிருப்பேன்;␢ அவன் லீலிபோல் மலருவான்;␢ லெபனோனின் மரம்போல் § வேரூன்றி நிற்பான்.⁾

6 ⁽அவனுடைய கிளைகள்␢ விரிந்து பரவும்;␢ அவன் பொலிவு␢ ஒலிவ மரம் போல் இருக்கும்;␢ லெபனோனைப்போல்␢ அவன் நறுமணம் பரப்புவான்.⁾

7 ⁽அவர்கள் திரும்பிவந்து என்*␢ நிழலில் குடியிருப்பார்கள்;␢ கோதுமைபோல்␢ தழைத்தோங்குவார்கள்.␢ திராட்சைக் கொடிபோல்␢ செழிப்படைவார்கள்.␢ லெபனோனின்␢ திராட்சை இரசம்போல் § அவர்களது புகழ் விளங்கும்.⁾

8 ⁽இனிமேல் எப்ராயிமுக்குச்␢ சிலைகள் எதற்கு?␢ நானே அவனுக்குச்␢ செவி சாய்த்து,␢ அவன்மேல்␢ அக்கறை கொண்டுள்ளேன்;␢ நான் பசுமையான␢ தேவதாரு மரம் போன்றவன்.␢ உன் கனி எல்லாம்␢ என்னிடமிருந்தே வரும்.⁾

9 ⁽ஞானம் நிறைந்தவன் எவனோ,␢ அவன் இவற்றை § உணர்ந்து கொள்ளட்டும்;␢ பகுத்தறிவு உள்ளவன் எவனோ,␢ அவன் இவற்றை␢ அறிந்து கொள்ளட்டும்;␢ ஆண்டவரின் நெறிகள்␢ நேர்மையானவை;␢ நேர்மையானவர்கள்␢ அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;␢ மீறுகிறவர்கள்␢ அவற்றில் இடறி விழுகின்றார்கள்.⁾

ஓசியா 14 ERV IRV TRV