1 ⁽அல்லேலூயா! ஆண்டவர்மீது␢ அன்புகூர்கின்றேன்;␢ ஏனெனில், எனக்கு இரங்குமாறு␢ நான் எழுப்பிய குரலை␢ அவர் கேட்டருளினார்.⁾

2 ⁽அவரை நான் மன்றாடிய நாளில்,␢ எனக்கு அவர் செவிசாய்த்தார்.⁾

3 ⁽சாவின் கயிறுகள்␢ என்னைப் பிணித்துக் கொண்டன;␢ பாதாளத்தின் துன்பங்கள்␢ என்னைப் பற்றிக் கொண்டன;␢ துன்பமும் துயரமும்␢ என்னை ஆட்கொண்டன.⁾

4 ⁽நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;␢ ‛ஆண்டவரே! என் உயிரைக்␢ காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.⁾

5 ⁽ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்;␢ நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.⁾

6 ⁽எளிய மனத்தோரை␢ ஆண்டவர் பாதுகாக்கின்றார்;␢ நான் தாழ்த்தப்பட்டபோது␢ எனக்கு மீட்பளித்தார்.⁾

7 ⁽‛என் நெஞ்சே! நீ மீண்டும்␢ அமைதிகொள்; ஏனெனில்,␢ ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’.⁾

8 ⁽என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;␢ என் கண் கலங்காதபடியும்␢ என் கால் இடறாதபடியும் செய்தார்.⁾

9 ⁽உயிர் வாழ்வோர் நாட்டில், நான்␢ ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.⁾

10 ⁽‛மிகவும் துன்புறுகிறேன்!’ என்று␢ சொன்னபோதும்␢ நான் நம்பிக்கையோடு இருந்தேன்.⁾

11 ⁽‛எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று␢ என் மனக்கலக்கத்தில்␢ நான் சொன்னேன்.⁾

12 ⁽ஆண்டவர் எனக்குச் செய்த␢ எல்லா நன்மைகளுக்காகவும்␢ நான் அவருக்கு␢ என்ன கைம்மாறு செய்வேன்?⁾

13 ⁽மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,␢ ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.⁾

14 ⁽இதோ! ஆண்டவருடைய மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ அவருக்கு என் பொருத்தனைகளை␢ நிறைவேற்றுவேன்.⁾

15 ⁽ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு␢ அவரது பார்வையில்␢ மிக மதிப்புக்குரியது.⁾

16 ⁽ஆண்டவரே! நான் உண்மையாகவே␢ உம் ஊழியன்; நான் உம் பணியாள்;␢ உம் அடியாளின் மகன்;␢ என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.⁾

17 ⁽நான் உமக்கு␢ நன்றிப் பலி செலுத்துவேன்;␢ ஆண்டவராகிய உம் பெயரைத்␢ தொழுவேன்;⁾

18 ⁽இப்பொழுதே உம் மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;⁾

19 ⁽உமது இல்லத்தில் முற்றங்களில்,␢ எருசலேமின் நடுவில்,␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.␢ அல்லேலூயா!⁾

Psalm 116 ERV IRV TRV