Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 103:7 in Tamil

Home Bible Psalm Psalm 103 Psalm 103:7

சங்கீதம் 103:7
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.

Tamil Easy Reading Version
தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார். அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.

Thiru Viviliam
⁽அவர் தம் வழிகளை␢ மோசேக்கு வெளிப்படுத்தினார்;␢ அவர் தம் செயல்களை␢ இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.⁾

Psalm 103:6Psalm 103Psalm 103:8

King James Version (KJV)
He made known his ways unto Moses, his acts unto the children of Israel.

American Standard Version (ASV)
He made known his ways unto Moses, His doings unto the children of Israel.

Bible in Basic English (BBE)
He gave knowledge of his way to Moses, and made his acts clear to the children of Israel.

Darby English Bible (DBY)
He made known his ways unto Moses, his acts unto the children of Israel.

World English Bible (WEB)
He made known his ways to Moses, His deeds to the children of Israel.

Young’s Literal Translation (YLT)
He maketh known His ways to Moses, To the sons of Israel His acts.

சங்கீதம் Psalm 103:7
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
He made known his ways unto Moses, his acts unto the children of Israel.

יוֹדִ֣יעַyôdîaʿyoh-DEE-ah
דְּרָכָ֣יוdĕrākāywdeh-ra-HAV
לְמֹשֶׁ֑הlĕmōšeleh-moh-SHEH
לִבְנֵ֥יlibnêleev-NAY
יִ֝שְׂרָאֵ֗לyiśrāʾēlYEES-ra-ALE
עֲלִילֽוֹתָיו׃ʿălîlôtāywuh-lee-LOH-tav

Cross Reference

சங்கீதம் 147:19
யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

யாத்திராகமம் 33:13
உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

சங்கீதம் 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

நெகேமியா 9:14
உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:35
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

யோவான் 5:45
பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.

ஏசாயா 63:11
ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?

சங்கீதம் 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

சங்கீதம் 105:26
தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

சங்கீதம் 99:7
மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.

சங்கீதம் 78:5
அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

சங்கீதம் 77:20
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.

உபாகமம் 34:10
மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

எண்ணாகமம் 12:7
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.

யாத்திராகமம் 24:2
மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.

யாத்திராகமம் 20:21
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

யாத்திராகமம் 19:20
கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

யாத்திராகமம் 19:8
அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.


Tags அவர் தமது வழிகளை மோசேக்கும் தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்
Psalm 103:7 in Tamil Concordance Psalm 103:7 in Tamil Interlinear Psalm 103:7 in Tamil Image