1 ⁽இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ␢ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம்␢ பொய்களும் கொள்ளைப் பொருளுமே!␢ சூறையாடலுக்கு முடிவே இல்லை!⁾

2 ⁽சாட்டையடிகளின் ஓசை!␢ சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி!␢ தாவிப் பாயும் புரவிகள்!␢ உருண்டோடும் தேர்கள்!⁾

3 ⁽குதிரை வீரர்கள் பாய்ந்து␢ தாக்குகின்றனர்;␢ வாள் மின்னுகின்றது;␢ ஈட்டி பளபளக்கின்றது;␢ வெட்டுண்டவர்கள்␢ கூட்டமாய்க் கிடக்கின்றனர்;␢ பிணங்கள் குவிந்து கிடக்கின்றன;␢ செத்தவர்களுக்குக்␢ கணக்கே இல்லை;␢ அந்தப் பிணங்கள் மேல்␢ மனிதர் இடறிவிழுகின்றனர்.⁾

4 ⁽அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய்,␢ தன் வேசித்தனங்களால்␢ மற்ற வேற்றினத்தாரையும்␢ தன் மயக்கும் கவர்ச்சியால்␢ பல இனங்களையும்␢ ஏமாற்றிய அந்த விலைமகளின்␢ எண்ணற்ற வேசித்தனங்களே␢ இதற்குக் காரணம்!⁾

5 ⁽இதோ! படைகளின்␢ ஆண்டவர் கூறுகிறார்:␢ உனக்கெதிராக நான் எழும்புவேன்;␢ நீ உடுத்தியிருக்கும் ஆடையை␢ உன் முகத்துக்கு மேலாகத்␢ தூக்குவேன்;␢ மற்ற வேற்றினத்தார்␢ உன் திறந்த மேனியையும்␢ அரசுகள் உன் அவமானத்தையும்␢ பார்க்கும்படி செய்வேன்.⁾

6 ⁽அருவருப்பானவற்றை␢ உன்மீது எறிவேன்;␢ உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப்␢ பகடிப் பொருள் ஆக்குவேன்.⁾

7 ⁽உன்னை நோக்குவோர் எல்லாரும்␢ உன்னிடமிருந்து பின்வாங்கி,␢ ‘நினிவே பாழாய்ப் போனது;␢ அவளுக்காகப் புலம்புவோர்␢ யாரேனும் உண்டோ?’␢ என்று சொல்வார்கள்.␢ உன்னைத் தேற்றுவோரை␢ எங்கே தேடுவேன்?⁾

8 ⁽நைல் நதியின் கரையருகில்␢ நீரால் சூழப்பட்ட,␢ கடலை அரணாகவும்␢ தண்ணீரை மதிலாகவும் கொண்ட␢ தீப்சு நகரைவிட␢ நீ சிறப்புற்று இருந்தாயோ?⁾

9 ⁽எத்தியோப்பியாவும் எகிப்தும்␢ அந்த நகருக்கு␢ வலிமையாய் இருந்தன;␢ அதன் வலிமைக்கோ␢ எல்லை இல்லை;␢ பூத்தும் லிபியாவும்␢ அதற்குத் துணையாய் இருந்தன.⁾

10 ⁽இருந்தும், அதன் மக்கள்␢ சிறைப் பிடிக்கப்பட்டு␢ அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்;␢ அதன் குழந்தைகள்␢ தெருக்கள் தோறும்␢ மோதியடிக்கப்பட்டனர்;␢ அதன் உயர்குடி மக்கள் மேல்␢ சீட்டுப் போடப்பட்டது;␢ அதன் பெரிய மனிதர் அனைவரும்␢ சங்கிலிகளால்␢ இறுகக் கட்டப்பட்டனர்.⁾

11 ⁽நீயும் குடிவெறியில்␢ மயங்கிக்கிடப்பாய்;␢ நீயும் உன் பகைவரிடமிருந்து␢ தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.⁾

12 ⁽உன் அரண்கள் யாவும்␢ முதலில் பழுத்த கனிகள் நிறைந்த␢ அத்தி மரங்களுக்கு ஒப்பானவை;␢ அந்த மரங்களைப் பிடித்து␢ உலுக்கும்போது␢ பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.⁾

13 ⁽உன் போர்வீரர்கள்␢ உன் பெண்களைப் போன்றவர்களே!␢ உன் நாட்டு வாயில்கள்␢ பகைவர்களுக்காகத்␢ திறந்து கிடக்கின்றன;␢ உன் தாழ்ப்பாள்கள்␢ நெருப்புக்கு இரையாயின.⁾

14 ⁽முற்றுகை நாள்களுக்காகத்␢ தண்ணீர் சேமித்து வை;␢ உன்னுடைய அரண்களை␢ வலிமைப்படுத்து;␢ களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு;␢ செங்கல் அறுக்கச்␢ சட்டங்களை எடு.⁾

15 ⁽ஆயினும், நெருப்பு␢ உன்னை விழுங்கும்;␢ வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்;␢ வெட்டுக்கிளிபோல்␢ அது உன்னை விழுங்கிவிடும்;␢ வெட்டுக்கிளிபோல்␢ நீங்கள் பலுகுங்கள்;␢ பச்சைக்கிளிபோல்␢ நீங்கள் பெருகுங்கள்.⁾

16 ⁽விண்மீன்களைவிட மிகுதியாக␢ உன் வணிகர்களைப்␢ பெருகச் செய்தாய்;␢ இந்த வெட்டுக்கிளிகள்␢ இறக்கையை விரித்துப்␢ பறந்தோடிவிடும்.⁾

17 ⁽உன் காவல் வீரர்கள்␢ பச்சைக் கிளிகளுக்கும்␢ உன் அரசு அலுவலர்␢ வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும்␢ ஒப்பானவர்;␢ குளிர்ந்த நாளில் அவை␢ வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன;␢ கதிரவன் எழுந்ததும்␢ பறந்தோடிவிடுகின்றன;␢ அதன்பின் அவை இருக்குமிடம்␢ யாருக்கும் தெரியாது.⁾

18 ⁽அசீரிய மன்னனே!␢ உன் ஆயர்கள் துயில் கொண்டனர்;␢ உன் படைத் தலைவர்கள்␢ உறக்கத்தில் ஆழ்ந்தனர்;␢ கூட்டிச் சேர்க்க யாருமின்றி␢ உன் மக்கள் மலைகளில்␢ சிதறிப் போயினர்.⁾

19 ⁽உன் காயத்துக்கு மருந்தில்லை,␢ உன் புண் குணமாகாது;␢ உன்னைப்பற்றிய␢ செய்தி கேட்கும் யாவரும்␢ கைகொட்டுவர்;␢ ஏனெனில்,␢ உன் இடைவிடாத கொடுமையால்␢ துன்புறாதவர் ஒருவரும் இல்லை.⁾

Nahum 3 ERV IRV TRV