1 ⁽தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு:␢ “நகர் என்ற பெயரை தமஸ்கு␢ இழந்துவிடும்; அது␢ பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.⁾

2 ⁽அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து␢ ஆடுமாடுகள் திரியும் இடமாகும்;␢ அவை அங்கே படுத்துக் கிடக்கும்;␢ அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.⁾

3 ⁽எப்ராயிம் நாட்டின் அரண்␢ தரைமட்டமாகும்;␢ தமஸ்கின் அரசு இல்லாதொழியும்;␢ இஸ்ரயேல் மக்களின்␢ மேன்மைக்கு நேர்ந்தது␢ சிரியாவில் எஞ்சியிருப்போரின்␢ நிலைமையாகும், என்கிறார்␢ படைகளின் ஆண்டவர்.⁾

4 ⁽அந்நாளில், யாக்கோபின் மேன்மை␢ தாழ்வடையும்;␢ அவனது கொழுத்த உடல்␢ மெலிந்து போகும்.⁾

5 ⁽அறுவடைசெய்வோன்␢ நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச்␢ சேர்த்த பின்னும்␢ அவனது கை அவற்றை␢ அறுவடை செய்தபின்னும்␢ சிந்திய கதிர்களைப்␢ பொறுக்கி எடுக்கும் பொழுதும்␢ இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல␢ யாக்கோபின் நிலைமை இருக்கும்.⁾

6 ⁽ஒலிவ மரத்தை உலுக்கும்போது␢ அதன் உச்சிக்கிளை நுனியில்␢ இரண்டு மூன்று காய்களும்,␢ பழமிருக்கும் கிளைகளில்␢ நாலைந்து பழங்களும்␢ விடப்பட்டிருப்பதுபோல்,␢ அவர்களிடையேயும்␢ பின்னால் பறிக்கப்படுவதற்கெனச்␢ சிலர் விடப்பட்டிருப்பர்,” என்கிறார்␢ இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.⁾

7 அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்; இஸ்ரயேலின் தூயவரைக்காண அவர்கள் கண்கள் விழையும்;

8 தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்; தாங்கள் கைப்படச்செய்த அசேராக் கம்பங்களையும் மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.

9 இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள் இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல, அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப் பாழ்வெளி ஆகி விடும்.

10 ⁽இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த␢ கடவுளை நீ மறந்துவிட்டாய்;␢ உன் அடைக்கலமான கற்பாறையை␢ நீ நினைவு கூரவில்லை;␢ ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை␢ நீ நட்டுவைத்தாலும்,␢ வேற்றுத் தெய்வத்திற்கு␢ இளம் கன்றுகளை நாட்டினாலும்,⁾

11 ⁽நீ அவற்றை நட்ட நாளிலேயே␢ பெரிதாக வளரச் செய்தாலும்,␢ விதைத்த காலையிலேயே␢ மலரச் செய்தாலும்,␢ துயரத்தின் நாளில்␢ தீராத வேதனையும் நோயுமே␢ உன் விளைச்சலாய் இருக்கும்.⁾

12 ⁽ஐயோ! மக்களினங்கள் பலவற்றின்␢ ஆரவாரம் கேட்கிறது;␢ கடல் கொந்தளிப்பதுபோல்␢ அவர்கள் கொந்தளிக்கிறார்கள்;␢ இதோ, மக்கள் கூட்டத்தின்␢ கர்ச்சனைக்குரல் கேட்கிறது;␢ வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல்␢ அவர்கள் முழங்குகிறார்கள்.⁾

13 ⁽பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர்␢ கர்ச்சிக்கிறார்கள்;␢ அவர்களை ஆண்டவர் அதட்டுவார்;␢ அவர்களும் வெகுதொலைவிற்கு␢ ஓடிப் போவார்கள்;␢ மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட␢ பதர் போன்றும்,␢ புயல்காற்று முன் சிக்குண்ட␢ புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.⁾

14 ⁽மாலைவேளையில்,␢ இதோ! எங்கும் திகில்;␢ விடிவதற்குள் அவர்கள்␢ இல்லாதொழிவார்கள்;␢ இதுவன்றோ நம்மைக்␢ கொள்ளையடிப்பவர்கள் பங்கு!␢ இதுவன்றோ நம்மைச்␢ சூறையாடுவோரின் நிலைமை.⁾

Isaiah 17 ERV IRV TRV