1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,

2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

4 இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.

5 ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ⦃“நீ என் மைந்தர்; இன்று நான் § உம்மைப் பெற்றெடுத்தேன்”⦄ என்றும், ⦃“நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், § அவர் எனக்கு மகனாயிருப்பார்”⦄ என்றும் எப்போதாவது கூறியதுண்டா?

6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, ⦃“கடவுளின் தூதர் அனைவரும் § அவரை வழிபடுவார்களாக”⦄ என்றார்.

7 வானதூதரைக் குறித்து அவர் ⦃“தம் தூதரைக் காற்றுகளாகவும் § தம் பணியாளரைத் § தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்”⦄ என்றார்.

8 தம் மகனைக் குறித்து, ⁽“இறைவனே, என்றுமுளது␢ உமது அரியணை;␢ உம் ஆட்சியின் செங்கோல்␢ வளையாத செங்கோல்.⁾

9 ⁽நீதியே உமது விருப்பம்;␢ அநீதி உமக்கு வெறுப்பு;␢ எனவே கடவுள், உமக்கே உரிய␢ கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால்␢ உம்மீது அருள்பொழிவு செய்து␢ அரசத் தோழரினும் மேலாய் § உயர்த்தினார்” ⁾ என்றார்.

10 மீண்டும், ⁽ “ஆண்டவரே, நீர் தொடக்கத்தில்␢ பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர்.␢ விண்ணுலகம் உமது கைவினைப்␢ பொருள் அன்றோ!⁾

11 ⁽அவையோ அழிந்துவிடும்;␢ நீரோ நிலைத்திருப்பீர்.␢ அவையெல்லாம் ஆடைபோல்␢ பழமையாகும்;⁾

12 ⁽போர்வையைப்போல்␢ அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்;␢ ஆடையைப்போல் அவற்றை␢ மாற்றிவிடுவீர்.␢ நீரோ மாறாதவர்!␢ உமது காலமும் முடிவற்றது” ⁾என்றார் அவர்.

13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, ⁽ “நான் உம் பகைவரை உமக்குக்␢ கால்மணையாக்கும் வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்”⁾ என்று கூறியதுண்டா?

14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?

Hebrews 1 ERV IRV TRV