1 ⁽ஆண்டவரே, உம்மை நோக்கி,␢ என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.⁾

2 ⁽என் கடவுளே,␢ உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;␢ நான் வெட்கமுற விடாதேயும்;␢ என் பகைவர் என்னைக் கண்டு␢ நகைக்க விடாதேயும்.⁾

3 ⁽உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்␢ வெட்கமுறுவதில்லை;␢ காரணமின்றித் துரோகம் செய்பவரோ␢ வெட்கத்திற்கு உள்ளாவர்.⁾

4 ⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾

5 ⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾

6 ⁽ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,␢ உமது பேரன்பையும் நினைந்தருளும்;␢ ஏனெனில், அவை␢ தொடக்கமுதல் உள்ளவையே.⁾

7 ⁽என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,␢ என் குற்றங்களையும் நினையாதேயும்,␢ உமது பேரன்பிற்கேற்ப␢ என்னை நினைத்தருளும்;␢ ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.⁾

8 ⁽ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;␢ ஆகையால், அவர் பாவிகளுக்கு␢ நல்வழியைக் கற்பிக்கின்றார்.⁾

9 ⁽எளியோரை நேரிய வழியில்␢ அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்␢ தமது வழியைக் கற்பிக்கின்றார்.⁾

10 ⁽ஆண்டவரது உடன்படிக்கையையும்␢ ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,␢ அவருடைய பாதைகளெல்லாம்␢ பேரன்பும் உண்மையும்␢ உள்ளனவாய் விளங்கும்.⁾

11 ⁽ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு␢ என் குற்றத்தை மன்னித்தருளும்;␢ ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.⁾

12 ⁽ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ␢ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும்␢ வழியை அவர் கற்பிப்பார்.⁾

13 ⁽அவர் நலமுடன் வாழ்வார்;␢ அவருடைய மரபினர் § நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.⁾

14 ⁽ஆண்டவரின் அன்புறவு அவருக்கு␢ அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;␢ அவர் அவர்களுக்கு தமது␢ உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;⁾

15 ⁽என் கண்கள் எப்போதும்␢ ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;␢ அவரே என் கால்களை␢ வலையிலிருந்து விடுவிப்பார்.⁾

16 ⁽என்னை நோக்கித் திரும்பி␢ என் மீது இரங்கும்; ஏனெனில்,␢ நான் துணையற்றவன்; துயருறுபவன்.⁾

17 ⁽என் வேதனைகள் பெருகிவிட்டன;␢ என் துன்பத்தினின்று␢ என்னை விடுவித்தருளும்.⁾

18 ⁽என் சிறுமையையும்␢ வருத்தத்தையும் பாரும்;␢ என் பாவங்கள் அனைத்தையும்␢ மன்னித்தருளும்.⁾

19 ⁽என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும்.␢ அவர்கள் எத்துணைக் கொடுமையாய் § என்னை வெறுக்கின்றனர்!⁾

20 ⁽என் உயிரைக் காப்பாற்றும்;␢ என்னை விடுவித்தருளும்;␢ உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள␢ என்னை வெட்கமுற விடாதேயும்.⁾

21 ⁽வாய்மையும் நேர்மையும்␢ எனக்கு அரணாய் இருக்கட்டும்;␢ ஏனெனில், நான் உம்மையே␢ நம்பியிருக்கின்றேன்.⁾

22 ⁽கடவுளே, இஸ்ரயேலரை␢ அவர்கள் படும் துன்பங்கள்␢ அனைத்தினின்றும் மீட்டருளும்.⁾