நீதிமொழிகள் 6:6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
Tamil Indian Revised Version
சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
Tamil Easy Reading Version
சோம்பேறியே! நீ எறும்பைப்போல இருக்க வேண்டும். எறும்பு என்ன செய்கிறது என்று பார். அதனிடமிருந்து கற்றுக்கொள்.
திருவிவிலியம்
சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்;
Title
சோம்பேறியாக இருப்பதில் உள்ள ஆபத்து
Other Title
சோம்பேறியாயிராதே
King James Version (KJV)
Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:
American Standard Version (ASV)
Go to the ant, thou sluggard; Consider her ways, and be wise:
Bible in Basic English (BBE)
Go to the ant, you hater of work; give thought to her ways and be wise:
Darby English Bible (DBY)
Go to the ant, thou sluggard; consider her ways and be wise:
World English Bible (WEB)
Go to the ant, you sluggard. Consider her ways, and be wise;
Young’s Literal Translation (YLT)
Go unto the ant, O slothful one, See her ways and be wise;
நீதிமொழிகள் Proverbs 6:6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:
| לֵֽךְ | lēk | lake | |
| אֶל | ʾel | el | |
| נְמָלָ֥ה | nĕmālâ | neh-ma-LA | |
| עָצֵ֑ל | ʿāṣēl | ah-TSALE | |
| רְאֵ֖ה | rĕʾē | reh-A | |
| דְרָכֶ֣יהָ | dĕrākêhā | deh-ra-HAY-ha | |
| וַחֲכָֽם׃ | waḥăkām | va-huh-HAHM |
இணை வசனம்
Hebrews 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
Proverbs 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
Proverbs 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
Proverbs 10:26
பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
Proverbs 6:9
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
Matthew 25:26
அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
Romans 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
Matthew 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
Proverbs 30:25
அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
Proverbs 18:9
தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
Job 12:7
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப்போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்.
Proverbs 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
Proverbs 19:24
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
Proverbs 21:25
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
Proverbs 22:13
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
Isaiah 1:3
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.
Proverbs 1:17
எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
Tags சோம்பேறியே நீ எறும்பினிடத்தில்போய் அதின் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்
நீதிமொழிகள் 6:6 Concordance நீதிமொழிகள் 6:6 Interlinear நீதிமொழிகள் 6:6 Image