நீதிமொழிகள் 23:34
நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
Tamil Indian Revised Version
நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய்.
Tamil Easy Reading Version
நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும்.
திருவிவிலியம்
கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும்.
King James Version (KJV)
Yea, thou shalt be as he that lieth down in the midst of the sea, or as he that lieth upon the top of a mast.
American Standard Version (ASV)
Yea, thou shalt be as he that lieth down in the midst of the sea, Or as he that lieth upon the top of a mast.
Bible in Basic English (BBE)
Yes, you will be like him who takes his rest on the sea, or on the top of a sail-support.
Darby English Bible (DBY)
and thou shalt be as he that lieth down in the midst of the sea, and as he that lieth down upon the top of a mast:
World English Bible (WEB)
Yes, you will be as he who lies down in the midst of the sea, Or as he who lies on top of the rigging:
Young’s Literal Translation (YLT)
And thou hast been as one lying down in the heart of the sea, And as one lying down on the top of a mast.
நீதிமொழிகள் Proverbs 23:34
நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
Yea, thou shalt be as he that lieth down in the midst of the sea, or as he that lieth upon the top of a mast.
| וְ֭הָיִיתָ | wĕhāyîtā | VEH-ha-yee-ta | |
| כְּשֹׁכֵ֣ב | kĕšōkēb | keh-shoh-HAVE | |
| בְּלֶב | bĕleb | beh-LEV | |
| יָ֑ם | yām | yahm | |
| וּ֝כְשֹׁכֵ֗ב | ûkĕšōkēb | OO-heh-shoh-HAVE | |
| בְּרֹ֣אשׁ | bĕrōš | beh-ROHSH | |
| חִבֵּֽל׃ | ḥibbēl | hee-BALE |
இணை வசனம்
Exodus 15:8
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
Luke 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
Luke 17:27
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
Matthew 24:38
எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
Joel 1:5
வெறியரே விழித்து எழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.
1 Kings 20:16
அவர்கள் மத்தியானவேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறிகொண்டிருந்தார்கள்.
1 Kings 16:9
இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறி கொண்டிருக்கையில்,
2 Samuel 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.
1 Samuel 30:16
இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
1 Samuel 25:33
நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.
1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
Tags நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும் பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்
நீதிமொழிகள் 23:34 Concordance நீதிமொழிகள் 23:34 Interlinear நீதிமொழிகள் 23:34 Image