நீதிமொழிகள் 20:9
என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
Tamil Indian Revised Version
என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?
Tamil Easy Reading Version
ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிற வைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது.
திருவிவிலியம்
⁽“என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையா யிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்?⁾
King James Version (KJV)
Who can say, I have made my heart clean, I am pure from my sin?
American Standard Version (ASV)
Who can say, I have made my heart clean, I am pure from my sin?
Bible in Basic English (BBE)
Who is able to say, I have made my heart clean, I am free from my sin?
Darby English Bible (DBY)
Who can say, I have made my heart clean, I am pure from my sin?
World English Bible (WEB)
Who can say, “I have made my heart pure. I am clean and without sin?”
Young’s Literal Translation (YLT)
Who saith, `I have purified my heart, I have been cleansed from my sin?’
நீதிமொழிகள் Proverbs 20:9
என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?
Who can say, I have made my heart clean, I am pure from my sin?
| מִֽי | mî | mee | |
| יֹ֭אמַר | yōʾmar | YOH-mahr | |
| זִכִּ֣יתִי | zikkîtî | zee-KEE-tee | |
| לִבִּ֑י | libbî | lee-BEE | |
| טָ֝הַ֗רְתִּי | ṭāhartî | TA-HAHR-tee | |
| מֵחַטָּאתִֽי׃ | mēḥaṭṭāʾtî | may-ha-ta-TEE |
இணை வசனம்
1 Kings 8:46
பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைப்பிடித்துக்கொண்டுபோகும்போது,
Ecclesiastes 7:20
ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
Job 14:4
அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.
2 Chronicles 6:36
பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில்,
1 John 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
James 3:2
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
1 Corinthians 4:4
என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
Psalm 51:5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
Job 25:4
இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Job 15:14
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
Tags என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன் என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்
நீதிமொழிகள் 20:9 Concordance நீதிமொழிகள் 20:9 Interlinear நீதிமொழிகள் 20:9 Image