நீதிமொழிகள் 19:2
ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பிநடக்கிறான்.
Tamil Indian Revised Version
ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
Tamil Easy Reading Version
சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.
திருவிவிலியம்
⁽எண்ணிப் பாராமல் செயலில் இறங்கு வதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.⁾
King James Version (KJV)
Also, that the soul be without knowledge, it is not good; and he that hasteth with his feet sinneth.
American Standard Version (ASV)
Also, that the soul be without knowledge is not good; And he that hasteth with his feet sinneth.
Bible in Basic English (BBE)
Further, without knowledge desire is not good; and he who is over-quick in acting goes out of the right way.
Darby English Bible (DBY)
Also that a person be without knowledge is not good; and he that hasteth with his feet maketh false steps.
World English Bible (WEB)
It isn’t good to have zeal without knowledge; Nor being hasty with one’s feet and missing the way.
Young’s Literal Translation (YLT)
Also, without knowledge the soul `is’ not good, And the hasty in feet is sinning.
நீதிமொழிகள் Proverbs 19:2
ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பிநடக்கிறான்.
Also, that the soul be without knowledge, it is not good; and he that hasteth with his feet sinneth.
| גַּ֤ם | gam | ɡahm | |
| בְּלֹא | bĕlōʾ | beh-LOH | |
| דַ֣עַת | daʿat | DA-at | |
| נֶ֣פֶשׁ | nepeš | NEH-fesh | |
| לֹא | lōʾ | loh | |
| ט֑וֹב | ṭôb | tove | |
| וְאָ֖ץ | wĕʾāṣ | veh-ATS | |
| בְּרַגְלַ֣יִם | bĕraglayim | beh-rahɡ-LA-yeem | |
| חוֹטֵֽא׃ | ḥôṭēʾ | hoh-TAY |
இணை வசனம்
Proverbs 21:5
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
Proverbs 29:20
தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
Philippians 1:9
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
Romans 10:2
தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
John 16:3
அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
Hosea 4:6
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
Isaiah 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.
Isaiah 27:11
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
Ecclesiastes 12:9
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
Ecclesiastes 7:9
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
Proverbs 28:22
வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
Proverbs 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
Proverbs 25:8
வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
Proverbs 14:29
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
Proverbs 1:16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
Job 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
Proverbs 10:21
நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.
Tags ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல கால் துரிதமானவன் தப்பிநடக்கிறான்
நீதிமொழிகள் 19:2 Concordance நீதிமொழிகள் 19:2 Interlinear நீதிமொழிகள் 19:2 Image