நீதிமொழிகள் 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
Tamil Indian Revised Version
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
Tamil Easy Reading Version
அறிவானது ஜனங்களுக்கு உண்மையான வாழ்க்கையைத் தரும். ஆனால் அறிவற்றவர்களோ மேலும் முட்டாள் ஆவதையே விரும்புவார்கள்.
திருவிவிலியம்
⁽விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.⁾
King James Version (KJV)
Understanding is a wellspring of life unto him that hath it: but the instruction of fools is folly.
American Standard Version (ASV)
Understanding is a well-spring of life unto him that hath it; But the correction of fools is `their’ folly.
Bible in Basic English (BBE)
Wisdom is a fountain of life to him who has it; but the punishment of the foolish is their foolish behaviour.
Darby English Bible (DBY)
Wisdom is a fountain of life for him that hath it; but the instruction of fools is folly.
World English Bible (WEB)
Understanding is a fountain of life to one who has it, But the punishment of fools is their folly.
Young’s Literal Translation (YLT)
A fountain of life `is’ understanding to its possessors, The instruction of fools is folly.
நீதிமொழிகள் Proverbs 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
Understanding is a wellspring of life unto him that hath it: but the instruction of fools is folly.
| מְק֣וֹר | mĕqôr | meh-KORE | |
| חַ֭יִּים | ḥayyîm | HA-yeem | |
| שֵׂ֣כֶל | śēkel | SAY-hel | |
| בְּעָלָ֑יו | bĕʿālāyw | beh-ah-LAV | |
| וּמוּסַ֖ר | ûmûsar | oo-moo-SAHR | |
| אֱוִלִ֣ים | ʾĕwilîm | ay-vee-LEEM | |
| אִוֶּֽלֶת׃ | ʾiwwelet | ee-WEH-let |
இணை வசனம்
John 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Luke 6:39
பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா
Proverbs 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Proverbs 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
John 6:68
சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
John 6:63
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
Matthew 23:16
குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
Matthew 15:14
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Proverbs 18:4
மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
Proverbs 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
Proverbs 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
Proverbs 14:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Tags புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று மதியீனரின் போதனை மதியீனமே
நீதிமொழிகள் 16:22 Concordance நீதிமொழிகள் 16:22 Interlinear நீதிமொழிகள் 16:22 Image