யோசுவா 12

fullscreen1 யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

fullscreen2 அந்த ராஜாக்களில், எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,

fullscreen3 சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரேத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிறதேசத்தையும் தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.

fullscreen4 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

fullscreen5 எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான்.

fullscreen6 அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.

fullscreen7 யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

fullscreen8 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

fullscreen9 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

fullscreen10 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

fullscreen11 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

fullscreen12 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

fullscreen13 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

fullscreen14 ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,

fullscreen15 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,

fullscreen16 மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,

fullscreen17 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,

fullscreen18 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,

fullscreen19 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

fullscreen20 சிம்சோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,

fullscreen21 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,

fullscreen22 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

fullscreen23 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,

fullscreen24 திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்! தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன்.

Thiru Viviliam
⁽தானியமும் திராட்சையும்␢ நன்கு விளையும் காலத்தில் அடையும்␢ மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை␢ நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.⁾

சங்கீதம் 4:6சங்கீதம் 4சங்கீதம் 4:8

King James Version (KJV)
Thou hast put gladness in my heart, more than in the time that their corn and their wine increased.

American Standard Version (ASV)
Thou hast put gladness in my heart, More than `they have’ when their grain and their new wine are increased.

Bible in Basic English (BBE)
Lord, you have put joy in my heart, more than they have when their grain and their wine are increased.

Darby English Bible (DBY)
Thou hast put joy in my heart, more than in the time that their corn and their new wine was in abundance.

Webster’s Bible (WBT)
There are many that say, Who will show us any good? LORD, lift thou upon us the light of thy countenance.

World English Bible (WEB)
You have put gladness in my heart, More than when their grain and their new wine are increased.

Young’s Literal Translation (YLT)
Thou hast given joy in my heart, From the time their corn and their wine Have been multiplied.

சங்கீதம் Psalm 4:7
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
Thou hast put gladness in my heart, more than in the time that their corn and their wine increased.

Thou
hast
put
נָתַ֣תָּהnātattâna-TA-ta
gladness
שִׂמְחָ֣הśimḥâseem-HA
in
my
heart,
בְלִבִּ֑יbĕlibbîveh-lee-BEE
time
the
in
than
more
מֵעֵ֬תmēʿētmay-ATE
that
their
corn
דְּגָנָ֖םdĕgānāmdeh-ɡa-NAHM
and
their
wine
וְתִֽירוֹשָׁ֣םwĕtîrôšāmveh-tee-roh-SHAHM
increased.
רָֽבּוּ׃rābbûRA-boo