1 உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.

2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.

3 ⁽அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:␢ “படைகளின் ஆண்டவர்␢ தூயவர், தூயவர், தூயவர்;␢ மண்ணுலகம் முழுவதும் அவரது␢ மாட்சியால் நிறைந்துள்ளது” என்று␢ உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.⁾

4 ⁽கூறியவரின் குரல் ஒலியால்␢ வாயில் நிலைகளின் அடித்தளங்கள்␢ அசைந்தன;␢ கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.⁾

5 அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.

6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.

7 அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார்.

8 மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.

9 அப்பொழுது அவர், “நீ இந்த மக்களை அணுகி, ‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்’ என்று சொல்.

10 அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்” என்றார்.

11 ⁽அதற்கு நான், ‘என் தலைவரே!␢ எத்துணை காலத்திற்கு இது␢ இவ்வாறிருக்கும்?” என்று வினவினேன்.␢ அதற்கு அவர்,␢ “நகரங்கள் அழிந்து␢ குடியிருப்பார் இல்லாதனவாகும்;␢ வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்;␢ நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்;⁾

12 ⁽ஆண்டவர் மனிதர்களைத்␢ தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்;␢ நாட்டில் குடியிருப்பாரின்றி␢ வெற்றிடங்கள் பல தோன்றும்;␢ அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.⁾

13 ⁽பத்தில் ஒரு பங்கு மட்டும்␢ நாட்டில் எஞ்சியிருந்தாலும்␢ அதுவும் அழிக்கப்படும்;␢ தேவதாரு அல்லது கருவாலி மரம்␢ வெட்டி வீழ்த்தப்பட்டபின்␢ அடிமரம் எஞ்சியிருப்பதுபோல்␢ அது இருக்கும்.␢ அந்த அடிமரம்தான்␢ தூய வித்தாகும்,” என்றார்.⁾