1 ⁽பாலைநிலமும் பாழ்வெளியும்␢ அகமகிழும்;␢ பொட்டல் நிலம் அக்களிப்படைந்து,␢ லீலிபோல் பூத்துக் குலுங்கும்.⁾

2 ⁽அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி␢ மகிழ்ந்து பாடிக் களிப்படையும்;␢ லெபனோனின் எழில்␢ அதற்கு அளிக்கப்படும்;␢ கர்மேல், சாரோனின் மேன்மை␢ அதில் ஒளிரும்;␢ ஆண்டவர் மாட்சியையும்␢ நம் கடவுளின் பெருமையையும்␢ அவர்கள் காண்பார்கள்.⁾

3 ⁽தளர்ந்துபோன கைகளைத்␢ திடப்படுத்துங்கள்;␢ தள்ளாடும் முழங்கால்களை␢ உறுதிப்படுத்துங்கள்.⁾

4 ⁽உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி,␢ “திடன் கொள்ளுங்கள்,␢ அஞ்சாதிருங்கள்;␢ இதோ, உங்கள் கடவுள்␢ பழிதீர்க்க வருவார்;␢ அநீதிக்குப் பழிவாங்கும்␢ கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”⁾

5 ⁽அப்போது பார்வையற்றோரின்␢ கண்கள் பார்க்கும்;␢ காது கேளாதோரின்␢ செவிகள் கேட்கும்.⁾

6 ⁽அப்பொழுது, காலூனமுற்றோர்␢ மான்போல் துள்ளிக்குதிப்பர்;␢ வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;␢ பாலைநிலத்தில் நீரூற்றுகள்␢ பீறிட்டு எழும்;␢ வறண்ட நிலத்தில் நீரோடைகள்␢ பாய்ந்தோடும்.⁾

7 ⁽கனல் கக்கும் மணல்பரப்பு␢ நீர்த் தடாகம் ஆகும்;␢ தாகமுற்ற தரை␢ நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்;␢ குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும்␢ கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.⁾

8 ⁽அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்;␢ அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும்.␢ தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க்␢ கடந்து செல்லார்;␢ அவ்வழிவரும் பேதையரும்␢ வழி தவறிச் செல்லார்.⁾

9 ⁽அங்கே சிங்கம் இராது;␢ அவ்வழியில் கொடிய விலங்குகள்␢ செல்வதில்லை, காணப்படுவதுமில்லை;␢ மீட்படைந்தவர்களே␢ அவ்வழியில் நடப்பார்கள்.⁾

10 ⁽ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர்␢ திரும்பி வருவர்;␢ மகிழ்ந்து பாடிக் கொண்டே␢ சீயோனுக்கு வருவர்;␢ அவர்கள் முகம் என்றுமுள␢ மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்;␢ அவர்கள் மகிழ்ச்சியும்␢ பூரிப்பும் அடைவார்கள்;␢ துன்பமும் துயரமும் பறந்தோடும்.⁾