1 ⁽[நான் காவல் மாடத்தில் நிற்பேன்;␢ கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்;␢ என் வாயிலாக ஆண்டவர்␢ என்ன கூறப்போகின்றார் என்றும்␢ என் முறையீட்டுக்கு␢ என்ன விடையளிப்பார் என்றும்␢ கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.⁾

2 ⁽ஆண்டவர் எனக்கு அளித்த␢ மறுமொழி இதுவே:␢ “காட்சியை எழுதிவை;␢ விரைவாய் ஓடுகிறவனும்␢ படிக்கும் வண்ணம்␢ பலகைகளில் தெளிவாய் எழுது.⁾

3 ⁽குறித்த காலத்தில்␢ நிறைவேறுவதற்காகக்␢ காட்சி இன்னும் காத்திருக்கின்றது;␢ முடிவை நோக்கி␢ விரைந்து செல்கின்றது.␢ ஒருக்காலும் பொய்க்காது.␢ அது காலந்தாழ்த்தி␢ வருவதாகத் தோன்றினால்,␢ எதிர்பார்த்துக் காத்திரு;␢ அது நிறைவேறியே தீரும்;␢ காலம் தாழ்த்தாது.⁾

4 ⁽இதை நம்பாதவரோ உள்ளத்திலே␢ நேர்மையற்றவராய் இருப்பர்;␢ நேர்மையுடையவரோ␢ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.⁾

5 ⁽மேலும் செல்வம்* ஏமாற்றிவிடும்;␢ ஆணவக்காரர்␢ நிலைத்து நிற்கமாட்டார்;␢ அவர்களது பேராசை␢ பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது;␢ சாவைப்போல் அவர்களும்␢ போதும் என்று நிறைவு அடைவதில்லை;␢ வேற்றினத்தார் யாவரையும்␢ அவர்கள் தங்கள் பக்கம்␢ சேர்த்துக் கொள்கின்றனர்;␢ மக்களினங்கள் அனைத்தையும்␢ தங்கள் உடைமை ஆக்கிக்␢ கொள்கின்றனர்.⁾

6 ⁽ஆனால், தோல்வியுற்ற அனைவரும்␢ அவர்கள் மேல் பழிமொழிகளையும்,␢ ஏளனப் பாடல்களையும்␢ இப்படிப் புனைவார்கள்;␢ ‘தமக்குரியது அல்லாததைத்␢ தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு␢ ஐயோ கேடு!␢ இன்னும் எத்துணைக் காலத்திற்கு␢ இப்படிச் செய்வர்?␢ அவர்கள் தங்கள் மேல்␢ அடைமானங்களையே␢ சுமத்திக் கொள்கின்றார்கள்!’⁾

7 ⁽உமக்குக் கடன் கொடுத்தவர்கள்␢ திடீரென␢ எதிர்த்தெழ மாட்டார்களோ?␢ உன்னைத் திகிலடையச்␢ செய்கின்றவர்கள்␢ விழித்தெழ மாட்டார்களோ?␢ அப்பொழுது நீ அவர்களுக்குக்␢ கொள்ளைப் பொருள் ஆவாய்.⁾

8 ⁽நீ பல நாட்டினரைச் சூறையாடினாய்;␢ மனித இரத்தத்தைச் சிந்தினாய்;␢ நாட்டுக்கும், நகர்களுக்கும்␢ அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்␢ கொடுமைகள் செய்தாய்;␢ இவற்றிற்காக,␢ மக்களினங்களுள் எஞ்சியோர் யாவரும்␢ உன்னைச் சூறையாடுவர்.⁾

9 ⁽தீமையின் பளுவிலிருந்து தப்ப,␢ தான் வாழுமிடத்தை␢ மிக உயரத்தில் அமைக்க,␢ தன் குடும்பத்திற்காக␢ நேர்மையற்ற வழியில்␢ பொருள் சேர்க்கிறவனுக்கு␢ ஐயோ கேடு!⁾

10 ⁽உன் திட்டங்களால்␢ உன் குடும்பத்திற்கு␢ மானக்கேட்டை நீ வருவித்தாய்;␢ மக்களினங்கள் பலவற்றை␢ அழித்தமையால்,␢ உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.⁾

11 ⁽சுவரிலிருக்கும் கற்களும்␢ உனக்கு எதிராகக் கூக்குரலிடும்;␢ கட்டடத்தின் உத்திரம்␢ அதை எதிரொலிக்கும்⁾

12 ⁽இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி,␢ அநீதியால்␢ பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு␢ ஐயோ கேடு!⁾

13 ⁽மக்களினங்களின் உழைப்பு␢ நெருப்புக்கு இரையாவதும்,␢ வேற்றினத்தாரின் களைப்பு␢ வீணாகப் போவதும்␢ படைகளின் ஆண்டவரது␢ திருச்செயல் அன்றோ?⁾

14 ⁽தண்ணீரால்␢ கடல் நிரம்பியிருப்பது போல␢ ஆண்டவரின்␢ மாட்சியைப் பற்றிய அறிவால்␢ மண்ணுலகு நிறைந்திருக்கும்.⁾

15 ⁽அடுத்திருப்பவர் மீது␢ கொண்ட சினத்தினால்␢ அவர்களைக் குடிவெறியர்களாக்கி␢ அவர்களது திறந்த மேனியின்␢ அலங்கோலத்தைக் காணும்வரை␢ குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு!⁾

16 ⁽நீ மேன்மை அடையாது␢ ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்;␢ நீயும் குடி,␢ குடித்துவிட்டுத் தள்ளாடு;␢ ஆண்டவரின் வலக்கையிலுள்ள␢ தண்டனைக்கலம்␢ உன்னிடம் திரும்பி வரும்;␢ அப்போது உன் மேன்மை␢ மானக்கேடாய் மாறும்.⁾

17 ⁽லெபனோனுக்கு நீ செய்த கொடுமை␢ உன் மீது வந்து விழும்;␢ நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே␢ உன்னை நடுக்கமுறச் செய்யும்;␢ ஏனெனில், நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்;␢ நாட்டுக்கும் நகர்க்கும்␢ அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்␢ கொடுமைகள் செய்தாய்.⁾

18 ⁽சிற்பி செதுக்கிய சிலையாலும்,␢ வார்ப்படத்தில் வடித்தெடுத்த␢ படிமத்தாலும் பயன் என்ன?␢ அவை பொய்களின் பிறப்பிடமே!␢ ஆயினும், சிற்பி தான் செதுக்கிய␢ ஊமைச் சிலைகளாகிய␢ கைவேலைகளிலே␢ நம்பிக்கை வைக்கிறான்.⁾

19 ⁽மரக்கட்டையிடம்,␢ ‘விழித்தெழும்’ என்றும்␢ ஊமைக் கல்லிடம்␢ ‘எழுந்திரும்’ என்றும்␢ சொல்கிறவனுக்கு ஐயோ கேடு!␢ அவை ஏதேனும்␢ வெளிப்பாடு அருள முடியுமோ?␢ பொன் வெள்ளியால்␢ பொதியப்பட்டிருப்பினும்␢ உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!⁾

20 ⁽ஆனால் ஆண்டவர்␢ தம் புனித கோவிலில்␢ வீற்றிருக்கின்றார்;␢ அவர் திருமுன்␢ மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக.⁾