சூழல் வசனங்கள் யாத்திராகமம் 8:29
யாத்திராகமம் 8:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

אֶל, אֶל, יְהוָ֔ה, אֶת
யாத்திராகமம் 8:2

நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.

אֶת
யாத்திராகமம் 8:5

மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.

וַיֹּ֣אמֶר, אֶל, אֶת, אֶת
யாத்திராகமம் 8:6

அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள் மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.

אֶת, אֶת
யாத்திராகமம் 8:7

மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.

אֶת
யாத்திராகமம் 8:8

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

אֶל, יְהוָ֔ה, אֶת, הָעָ֔ם, לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 8:9

அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.

וַיֹּ֣אמֶר
யாத்திராகமம் 8:12

மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

אֶל, יְהוָ֔ה
யாத்திராகமம் 8:15

இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

אֶת
யாத்திராகமம் 8:16

அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

וַיֹּ֣אמֶר, אֶל, אֶת
யாத்திராகமம் 8:17

அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையிலிருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசமெங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.

אֶת, אֶת
யாத்திராகமம் 8:18

மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது.

אֶת
யாத்திராகமம் 8:19

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

אֶל, פַּרְעֹה֙
யாத்திராகமம் 8:20

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்துபோய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.

אֶל, מֹשֶׁ֗ה, יְהוָ֔ה
யாத்திராகமம் 8:21

என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

אֶת, אֶת, אֶת
யாத்திராகமம் 8:22

பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,

אֶת
யாத்திராகமம் 8:25

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.

אֶל
யாத்திராகமம் 8:26

அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாய் இருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?

וַיֹּ֣אמֶר, מֹשֶׁ֗ה, אֶת
யாத்திராகமம் 8:28

அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

וַיֹּ֣אמֶר
யாத்திராகமம் 8:30

மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.

אֶל
யாத்திராகமம் 8:32

பார்வோனோ இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.

פַּרְעֹה֙, אֶת, אֶת
of
flies
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
And
הִנֵּ֨הhinnēhee-NAY
Moses
אָֽנֹכִ֜יʾānōkîah-noh-HEE
Behold,
I
יוֹצֵ֤אyôṣēʾyoh-TSAY
go
מֵֽעִמָּךְ֙mēʿimmokMAY-ee-moke
out
from
I
will
intreat
וְהַעְתַּרְתִּ֣יwĕhaʿtartîveh-ha-tahr-TEE
thee,
אֶלʾelel
and

יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord
the
may
וְסָ֣רwĕsārveh-SAHR
depart
swarms
the
that
הֶֽעָרֹ֗בheʿārōbheh-ah-ROVE
from
Pharaoh,
מִפַּרְעֹ֛הmipparʿōmee-pahr-OH
servants,
his
from
מֵֽעֲבָדָ֥יוmēʿăbādāywmay-uh-va-DAV
and
from
his
people,
וּמֵֽעַמּ֖וֹûmēʿammôoo-may-AH-moh
morrow:
to
מָחָ֑רmāḥārma-HAHR
but
רַ֗קraqrahk
let
not
אַלʾalal
more
יֹסֵ֤ףyōsēpyoh-SAFE
any
Pharaoh
פַּרְעֹה֙parʿōhpahr-OH
deceitfully
deal
הָתֵ֔לhātēlha-TALE
in
not
לְבִלְתִּי֙lĕbiltiyleh-veel-TEE
go
letting
שַׁלַּ֣חšallaḥsha-LAHK

people
אֶתʾetet
the
הָעָ֔םhāʿāmha-AM
to
sacrifice
לִזְבֹּ֖חַlizbōaḥleez-BOH-ak
to
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA