Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 79:5 in Tamil

Home Bible Psalm Psalm 79 Psalm 79:5

சங்கீதம் 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

Tamil Indian Revised Version
எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ? உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ?

Tamil Easy Reading Version
தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா? உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?

Thiru Viviliam
⁽ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம்␢ நீர் சினம் கொண்டிருப்பீர்?␢ என்றென்றுமா?␢ உமது வெஞ்சினம்␢ நெருப்பாக எரியுமோ?⁾

Psalm 79:4Psalm 79Psalm 79:6

King James Version (KJV)
How long, LORD? wilt thou be angry for ever? shall thy jealousy burn like fire?

American Standard Version (ASV)
How long, O Jehovah? wilt thou be angry for ever? Shall thy jealousy burn like fire?

Bible in Basic English (BBE)
How long, O Lord? will you be angry for ever? will your wrath go on burning like fire?

Darby English Bible (DBY)
How long, O Jehovah? wilt thou be angry for ever? Shall thy jealousy burn like fire?

Webster’s Bible (WBT)
How long, LORD? wilt thou be angry for ever? shall thy jealousy burn like fire?

World English Bible (WEB)
How long, Yahweh? Will you be angry forever? Will your jealousy burn like fire?

Young’s Literal Translation (YLT)
Till when, O Jehovah? art Thou angry for ever? Thy jealousy doth burn as fire.

சங்கீதம் Psalm 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?
How long, LORD? wilt thou be angry for ever? shall thy jealousy burn like fire?

עַדʿadad
מָ֣הma
יְ֭הוָהyĕhwâYEH-va
תֶּאֱנַ֣ףteʾĕnapteh-ay-NAHF
לָנֶ֑צַחlāneṣaḥla-NEH-tsahk
תִּבְעַ֥רtibʿarteev-AR
כְּמוֹkĕmôkeh-MOH
אֵ֝֗שׁʾēšaysh
קִנְאָתֶֽךָ׃qinʾātekākeen-ah-TEH-ha

Cross Reference

சங்கீதம் 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?

சங்கீதம் 85:5
என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?

சங்கீதம் 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

செப்பனியா 3:8
ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.

உபாகமம் 29:20
அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.

எசேக்கியேல் 36:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

சங்கீதம் 80:4
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.

சங்கீதம் 74:9
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

செப்பனியா 1:18
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

மீகா 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

ஏசாயா 64:9
கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.

சங்கீதம் 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.

சங்கீதம் 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

உபாகமம் 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.

உபாகமம் 32:16
அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.


Tags எதுவரைக்கும் கர்த்தாவே நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ
Psalm 79:5 in Tamil Concordance Psalm 79:5 in Tamil Interlinear Psalm 79:5 in Tamil Image