Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 45:5 in Tamil

Home Bible Psalm Psalm 45 Psalm 45:5

சங்கீதம் 45:5
உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

Tamil Indian Revised Version
உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.

Tamil Easy Reading Version
உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன. நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது அரசனாயிரும்.

Thiru Viviliam
⁽உம்முடைய கணைகள் கூரியன;␢ மன்னர்தம் மாற்றாரின்␢ நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம்␢ உம் காலடியில் வீழ்ந்திடுவர்.⁾

Psalm 45:4Psalm 45Psalm 45:6

King James Version (KJV)
Thine arrows are sharp in the heart of the king’s enemies; whereby the people fall under thee.

American Standard Version (ASV)
Thine arrows are sharp; The peoples fall under thee; `They are’ in the heart of the king’s enemies.

Bible in Basic English (BBE)
Your arrows are sharp in the heart of the king’s haters; because of them the peoples are falling under you.

Darby English Bible (DBY)
Thine arrows are sharp — peoples fall under thee — in the heart of the king’s enemies.

Webster’s Bible (WBT)
And in thy majesty ride prosperously because of truth and meekness and righteousness; and thy right hand shall teach thee terrible things.

World English Bible (WEB)
Your arrows are sharp. The nations fall under you, with arrows in the heart of the king’s enemies.

Young’s Literal Translation (YLT)
Thine arrows `are’ sharp, — Peoples fall under Thee — In the heart of the enemies of the king.

சங்கீதம் Psalm 45:5
உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
Thine arrows are sharp in the heart of the king's enemies; whereby the people fall under thee.

חִצֶּ֗יךָḥiṣṣêkāhee-TSAY-ha
שְׁנ֫וּנִ֥יםšĕnûnîmsheh-NOO-NEEM
עַ֭מִּיםʿammîmAH-meem
תַּחְתֶּ֣יךָtaḥtêkātahk-TAY-ha
יִפְּל֑וּyippĕlûyee-peh-LOO
בְּ֝לֵ֗בbĕlēbBEH-LAVE
אוֹיְבֵ֥יʾôybêoy-VAY
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

Cross Reference

சங்கீதம் 38:2
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

சங்கீதம் 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

சங்கீதம் 21:12
அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.

எண்ணாகமம் 24:8
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.

ரோமர் 15:18
புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7
தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:33
அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:14
திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:4
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

லுூக்கா 20:18
அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

லுூக்கா 19:42
உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

சகரியா 9:13
நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.

சங்கீதம் 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.

சங்கீதம் 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?


Tags உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள் அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும் ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்
Psalm 45:5 in Tamil Concordance Psalm 45:5 in Tamil Interlinear Psalm 45:5 in Tamil Image