Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 37:25 in Tamil

Home Bible Psalm Psalm 37 Psalm 37:25

சங்கீதம் 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.

Tamil Indian Revised Version
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.

Tamil Easy Reading Version
நான் இளைஞனாக இருந்தேன். இப்போது வயது முதிர்ந்தவன். நல்லோரைத் தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.

Thiru Viviliam
⁽இளைஞனாய் இருந்திருக்கிறேன்;␢ இதோ! முதியவன் ஆகிவிட்டேன்;␢ ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை␢ நான் கண்டதில்லை;␢ அவர்களுடைய மரபினர்␢ பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.⁾

Psalm 37:24Psalm 37Psalm 37:26

King James Version (KJV)
I have been young, and now am old; yet have I not seen the righteous forsaken, nor his seed begging bread.

American Standard Version (ASV)
I have been young, and now am old; Yet have I not seen the righteous forsaken, Nor his seed begging bread.

Bible in Basic English (BBE)
I have been young, and now am old, but I have not seen the good man without help, or his children looking for bread.

Darby English Bible (DBY)
I have been young, and now am old, and I have not seen the righteous forsaken, nor his seed seeking bread:

Webster’s Bible (WBT)
I have been young, and now am old; yet I have not seen the righteous forsaken, nor his seed begging bread.

World English Bible (WEB)
I have been young, and now am old, Yet I have not seen the righteous forsaken, Nor his children begging for bread.

Young’s Literal Translation (YLT)
Young I have been, I have also become old, And I have not seen the righteous forsaken, And his seed seeking bread.

சங்கீதம் Psalm 37:25
நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
I have been young, and now am old; yet have I not seen the righteous forsaken, nor his seed begging bread.

נַ֤עַר׀naʿarNA-ar
הָיִ֗יתִיhāyîtîha-YEE-tee
גַּםgamɡahm
זָ֫קַ֥נְתִּיzāqantîZA-KAHN-tee
וְֽלֹאwĕlōʾVEH-loh
רָ֭אִיתִיrāʾîtîRA-ee-tee
צַדִּ֣יקṣaddîqtsa-DEEK
נֶעֱזָ֑בneʿĕzābneh-ay-ZAHV
וְ֝זַרְע֗וֹwĕzarʿôVEH-zahr-OH
מְבַקֶּשׁmĕbaqqešmeh-va-KESH
לָֽחֶם׃lāḥemLA-hem

Cross Reference

எபிரெயர் 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

சங்கீதம் 25:13
அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.

1 சாமுவேல் 12:22
கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

சங்கீதம் 37:28
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

சங்கீதம் 112:2
அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

2 கொரிந்தியர் 4:9
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

நீதிமொழிகள் 13:22
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

சங்கீதம் 71:18
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.

பிலேமோன் 1:8
ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:16
செரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

லுூக்கா 1:53
பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.

சங்கீதம் 94:14
கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.

சங்கீதம் 71:9
முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.

சங்கீதம் 59:15
அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

யோபு 32:6
ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தாதிருந்தேன்.

யோபு 15:23
அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

யோசுவா 1:5
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

ஆதியாகமம் 17:7
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

சங்கீதம் 109:10
அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

ஏசாயா 13:16
அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.


Tags நான் இளைஞனாயிருந்தேன் முதிர்வயதுள்ளவனுமானேன் ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும் அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை
Psalm 37:25 in Tamil Concordance Psalm 37:25 in Tamil Interlinear Psalm 37:25 in Tamil Image