Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 35:4 in Tamil

Home Bible Psalm Psalm 35 Psalm 35:4

சங்கீதம் 35:4
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.

Tamil Indian Revised Version
என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக.

Tamil Easy Reading Version
சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும். அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். அவர்களை வெட்கமடையச் செய்யும்.

Thiru Viviliam
⁽என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்;␢ மானக்கேடுற்று இழிவடையட்டும்;␢ எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர்,␢ புறமுதுகிட்டு ஓடட்டும்.⁾

Psalm 35:3Psalm 35Psalm 35:5

King James Version (KJV)
Let them be confounded and put to shame that seek after my soul: let them be turned back and brought to confusion that devise my hurt.

American Standard Version (ASV)
Let them be put to shame and brought to dishonor that seek after my soul: Let them be turned back and confounded that devise my hurt.

Bible in Basic English (BBE)
Let them be overcome and put to shame who make attempts to take my soul; let those who would do me damage be turned back and made foolish.

Darby English Bible (DBY)
Let them be put to shame and confounded that seek after my life; let them be turned backward and brought to confusion that devise my hurt:

Webster’s Bible (WBT)
Let them be confounded and put to shame that seek after my soul: let them be turned back and brought to confusion that devise my hurt.

World English Bible (WEB)
Let those who seek after my soul be disappointed and brought to dishonor. Let those who plot my ruin be turned back and confounded.

Young’s Literal Translation (YLT)
They are ashamed and blush, those seeking my soul, Turned backward and confounded, Those devising my evil.

சங்கீதம் Psalm 35:4
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக.
Let them be confounded and put to shame that seek after my soul: let them be turned back and brought to confusion that devise my hurt.

יֵבֹ֣שׁוּyēbōšûyay-VOH-shoo
וְיִכָּלְמוּ֮wĕyikkolmûveh-yee-kole-MOO
מְבַקְשֵׁ֪יmĕbaqšêmeh-vahk-SHAY
נַ֫פְשִׁ֥יnapšîNAHF-SHEE
יִסֹּ֣גוּyissōgûyee-SOH-ɡoo
אָח֣וֹרʾāḥôrah-HORE
וְיַחְפְּר֑וּwĕyaḥpĕrûveh-yahk-peh-ROO
חֹ֝שְׁבֵ֗יḥōšĕbêHOH-sheh-VAY
רָעָתִֽי׃rāʿātîra-ah-TEE

Cross Reference

சங்கீதம் 129:5
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

யோவான் 18:6
நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.

மத்தேயு 27:1
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,

எசேக்கியேல் 13:19
சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய்சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

எரேமியா 46:5
அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 37:29
நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.

சங்கீதம் 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

சங்கீதம் 70:2
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.

சங்கீதம் 40:14
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.

சங்கீதம் 38:12
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

சங்கீதம் 35:26
எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.

சங்கீதம் 31:17
கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.

1 இராஜாக்கள் 19:10
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

1 சாமுவேல் 23:23
அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.


Tags என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக
Psalm 35:4 in Tamil Concordance Psalm 35:4 in Tamil Interlinear Psalm 35:4 in Tamil Image