Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 33:17 in Tamil

Home Bible Psalm Psalm 33 Psalm 33:17

சங்கீதம் 33:17
இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.

Tamil Indian Revised Version
காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.

Tamil Easy Reading Version
போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை.

Thiru Viviliam
⁽வெற்றி பெறப்␢ போர்க்குதிரையை நம்புவது வீண்;␢ மிகுந்த வலுவுள்ளதாயினும்␢ அது விடுவிக்காது.⁾

Psalm 33:16Psalm 33Psalm 33:18

King James Version (KJV)
An horse is a vain thing for safety: neither shall he deliver any by his great strength.

American Standard Version (ASV)
A horse is a vain thing for safety; Neither doth he deliver any by his great power.

Bible in Basic English (BBE)
A horse is a false hope; his great power will not make any man free from danger.

Darby English Bible (DBY)
The horse is a vain thing for safety; neither doth he deliver by his great power.

Webster’s Bible (WBT)
A horse is a vain thing for safety: neither shall he deliver any by his great strength.

World English Bible (WEB)
A horse is a vain thing for safety, Neither does he deliver any by his great power.

Young’s Literal Translation (YLT)
A false thing `is’ the horse for safety, And by the abundance of his strength He doth not deliver.

சங்கீதம் Psalm 33:17
இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.
An horse is a vain thing for safety: neither shall he deliver any by his great strength.

שֶׁ֣קֶרšeqerSHEH-ker
הַ֭סּוּסhassûsHA-soos
לִתְשׁוּעָ֑הlitšûʿâleet-shoo-AH
וּבְרֹ֥בûbĕrōboo-veh-ROVE
חֵ֝יל֗וֹḥêlôHAY-LOH
לֹ֣אlōʾloh
יְמַלֵּֽט׃yĕmallēṭyeh-ma-LATE

Cross Reference

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

நீதிமொழிகள் 21:31
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

சங்கீதம் 147:10
அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.

நியாயாதிபதிகள் 4:15
கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.

2 இராஜாக்கள் 7:6
ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,

யோபு 39:19
குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?

பிரசங்கி 9:11
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

ஏசாயா 30:16
அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.

ஓசியா 14:3
அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.


Tags இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது
Psalm 33:17 in Tamil Concordance Psalm 33:17 in Tamil Interlinear Psalm 33:17 in Tamil Image