1 ⁽ஆண்டவர் என் தலைவரிடம்,␢ ‛நான் உம் பகைவரை␢ உமக்குப் கால்மணையாக்கும்வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’␢ என்று உரைத்தார்.⁾

2 ⁽வலிமைமிகு உமது செங்கோலை␢ ஆண்டவர் சீயோனிலிருந்து ␢ ஒங்கச் செய்வார்; ␢ உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!⁾

3 ⁽நீர் உமது படைக்குத் ␢ தலைமை தாங்கும் நாளில்␢ தூய கோலத்துடன் உம் மக்கள்␢ தம்மை உவந்தளிப்பர்; ␢ வைகறை கருவுயிர்த்த பனியைப்போல ␢ உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.⁾

4 ⁽‛மெல்கிசெதேக்கின் முறைப்படி␢ நீர் என்றென்றும் குருவே’ என்று␢ ஆண்டவர் ஆணையிட்டுச்␢ சொன்னார்; அவர் தம் மனத்தை␢ மாற்றிக் கொள்ளார்.⁾

5 ⁽என் தலைவர் ␢ உம் வலப்பக்கத்தில் உள்ளார்;␢ தம் சினத்தின் நாளில்␢ மன்னர்களை நொறுக்குவார்.⁾

6 ⁽வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து ␢ அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்;␢ பாருலகெங்கும் தலைவர்களை␢ அவர் நொறுக்குவார்.⁾

7 ⁽வழியில் உள்ள நீரோடையிலிருந்து␢ அவர் பருகுவார்; ␢ ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.⁾

Psalm 110 ERV IRV TRV