1 ⁽தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து␢ தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்␢ கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு␢ ஐயோ கேடு!␢ பொழுது புலர்ந்தவுடன்␢ தங்கள் கைவலிமையினால்␢ அவர்கள் அதைச்␢ செய்து முடிக்கின்றார்கள்.⁾

2 ⁽வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு,␢ அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;␢ வீடுகள்மேல் இச்சை கொண்டு␢ அவற்றைக்␢ கைப்பற்றிக் கொள்கின்றார்கள்;␢ ஆண்களை ஒடுக்கி,␢ அவர்கள் வீட்டையும்␢ உரிமைச் சொத்தையும்␢ பறிமுதல் செய்கின்றார்கள்.⁾

3 ⁽ஆதலால், ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “இந்த இனத்தாருக்கு எதிராகத்␢ தீமை செய்யத் திட்டமிடுகிறேன்;␢ அதனினின்று␢ உங்கள் தலையை விடுவிக்க␢ உங்களால் இயலாது;␢ நீங்கள் ஆணவம் கொண்டு␢ நடக்கமாட்டீர்கள்;␢ ஏனெனில், காலம் தீயதாய் இருக்கும்.⁾

4 ⁽அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி␢ இரங்கற்பா இயற்றி,␢ ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே;␢ ஆண்டவருடைய மக்களின்␢ உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே!␢ நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக்␢ கொள்ளைக்காரர்களுக்குப்␢ பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று␢ ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.⁾

5 ⁽ஆதலால், நூல்பிடித்துப்␢ பாகம் பிரித்து␢ உங்களுக்குத் தருபவன் எவனும்␢ ஆண்டவரின் சபையில் இரான்.⁾

6 ⁽அவர்கள் பிதற்றுவது:␢ ‘சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்;␢ அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்;␢ மானக்கேடு நம்மை அணுகாது.⁾

7 ⁽யாக்கோபின் குடும்பத்தாரே,␢ ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ?␢ இவற்றைச் செய்பவர் அவர்தாமோ?␢ நேர்மையாய் நடப்போரிடம்␢ அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?’⁾

8 ⁽ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப்␢ பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்!␢ போரில் நாட்டம் கொள்ளாமல்,␢ அமைதியை நாடுவோரின்␢ மேலாடையைப் பறிக்கின்றீர்கள்;␢ இதனால், அவர்களின்␢ மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;⁾

9 ⁽என் மக்களின் கூட்டத்திலுள்ள␢ பெண்களை␢ அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து␢ விரட்டுகின்றீர்கள்;␢ அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம்␢ என் மாட்சி என்றும் விளங்காதவாறு␢ செய்துவிடுகின்றீர்கள்.⁾

10 ⁽எழுந்து அகன்றுபோங்கள்;␢ இது இளைப்பாறும் இடம் அல்ல;␢ நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது;␢ அது அழிவைக் கொண்டுவரும்.␢ அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.⁾

11 ⁽‘திராட்சை இரசத்தையும்␢ மதுவையும்பற்றி␢ உங்களுக்கு உரையாற்றுவேன்’␢ என்று கூறி,␢ வீண் சொற்களையும்␢ பொய்களையும் பிதற்றுகிறவன்தான்␢ இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!⁾

12 ⁽யாக்கோபே!␢ நான் உங்கள் அனைவரையும்␢ ஒன்றாகக் கூட்டுவேன்;␢ இஸ்ரயேலில் எஞ்சியோரை␢ ஒன்றாகத் திரட்டுவேன்;␢ இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை␢ ஆடுகளைக் கிடையில்␢ மடக்குவது போலவும்;␢ மந்தையை மேய்ச்சல் நிலத்தில்␢ வளைப்பது போலவும்␢ ஒன்றாகச் சேர்ப்பேன்.⁾

13 ⁽அவர்களின் வழிகாட்டிகள்␢ தடைகளைத் தகர்த்தெறிந்து␢ வெளியேறுவார்கள்;␢ அவர்களின் அரசர்␢ அவர்களுக்கு முன்னால்␢ கடந்து செல்வார்;␢ ஆண்டவரே அவர்களை␢ வழிநடத்திப் போவார்.”⁾