Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 9:23 in Tamil

Home Bible Mark Mark 9 Mark 9:23

மாற்கு 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார்.

Thiru Viviliam
இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்றார்.

Mark 9:22Mark 9Mark 9:24

King James Version (KJV)
Jesus said unto him, If thou canst believe, all things are possible to him that believeth.

American Standard Version (ASV)
And Jesus said unto him, If thou canst! All things are possible to him that believeth.

Bible in Basic English (BBE)
And Jesus said to him, If you are able! All things are possible to him who has faith.

Darby English Bible (DBY)
And Jesus said to him, The ‘if thou couldst’ is [if thou couldst] believe: all things are possible to him that believes.

World English Bible (WEB)
Jesus said to him, “If you can believe, all things are possible to him who believes.”

Young’s Literal Translation (YLT)
And Jesus said to him, `If thou art able to believe! all things are possible to the one that is believing;’

மாற்கு Mark 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
Jesus said unto him, If thou canst believe, all things are possible to him that believeth.

hooh
δὲdethay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
εἶπενeipenEE-pane
αὐτῷautōaf-TOH
Τὸtotoh
Εἰeiee
δύνασαιdynasaiTHYOO-na-say
πιστεῦσαι,pisteusaipee-STAYF-say
πάνταpantaPAHN-ta
δυνατὰdynatathyoo-na-TA
τῷtoh
πιστεύοντιpisteuontipee-STAVE-one-tee

Cross Reference

யோவான் 11:40
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

மத்தேயு 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மாற்கு 11:23
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 21:21
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லுூக்கா 17:6
அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

எபிரெயர் 11:6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

2 நாளாகமம் 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:9
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:

யோவான் 4:48
அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.


Tags இயேசு அவனை நோக்கி நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்
Mark 9:23 in Tamil Concordance Mark 9:23 in Tamil Interlinear Mark 9:23 in Tamil Image