அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக் குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.
முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.
பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.
| And thou shalt bring | וְהֵֽבֵאתָ֣ | wĕhēbēʾtā | veh-hay-vay-TA |
| אֶת | ʾet | et | |
| the meat offering | הַמִּנְחָ֗ה | hamminḥâ | ha-meen-HA |
| that | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| is made | יֵֽעָשֶׂ֛ה | yēʿāśe | yay-ah-SEH |
| of these things | מֵאֵ֖לֶּה | mēʾēlle | may-A-leh |
| unto the Lord: | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| and when it is presented | וְהִקְרִיבָהּ֙ | wĕhiqrîbāh | veh-heek-ree-VA |
| unto | אֶל | ʾel | el |
| the priest, | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| he shall bring | וְהִגִּישָׁ֖הּ | wĕhiggîšāh | veh-hee-ɡee-SHA |
| it unto | אֶל | ʾel | el |
| the altar. | הַמִּזְבֵּֽחַ׃ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |