சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.
பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.
இதோ பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யாரென்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| But I will punish | וּפָקַדְתִּ֧י | ûpāqadtî | oo-fa-kahd-TEE |
| עֲלֵיכֶ֛ם | ʿălêkem | uh-lay-HEM | |
| fruit the to according you | כִּפְרִ֥י | kiprî | keef-REE |
| of your doings, | מַעַלְלֵיכֶ֖ם | maʿallêkem | ma-al-lay-HEM |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| kindle will I and | וְהִצַּ֤תִּי | wĕhiṣṣattî | veh-hee-TSA-tee |
| a fire | אֵשׁ֙ | ʾēš | aysh |
| in the forest | בְּיַעְרָ֔הּ | bĕyaʿrāh | beh-ya-RA |
| devour shall it and thereof, | וְאָכְלָ֖ה | wĕʾoklâ | veh-oke-LA |
| all things | כָּל | kāl | kahl |
| round about | סְבִיבֶֽיהָ׃ | sĕbîbêhā | seh-vee-VAY-ha |