Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jonah 1:2 in Tamil

Home Bible Jonah Jonah 1 Jonah 1:2

யோனா 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

Tamil Indian Revised Version
நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார்.

Tamil Easy Reading Version
“நினிவே ஒரு பெரிய நகரம். நான் அங்கே மக்கள் செய்து கொண்டிருக்கிற அநேக தீமைகைளப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அந்நகரத்திற்குப் போய் அம்மக்களிடம் அத்தீமைகளை நிறுத்தும்படிச் சொல்” என்றார்.

Thiru Viviliam
அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன” என்றார்.

Jonah 1:1Jonah 1Jonah 1:3

King James Version (KJV)
Arise, go to Nineveh, that great city, and cry against it; for their wickedness is come up before me.

American Standard Version (ASV)
Arise, go to Nineveh, that great city, and cry against it; for their wickedness is come up before me.

Bible in Basic English (BBE)
Up! go to Nineveh, that great town, and let your voice come to it; for their evil-doing has come up before me.

Darby English Bible (DBY)
Arise, go to Nineveh, the great city, and cry against it; for their wickedness is come up before me.

World English Bible (WEB)
“Arise, go to Nineveh, that great city, and preach against it, for their wickedness has come up before me.”

Young’s Literal Translation (YLT)
`Rise, go unto Nineveh, the great city, and proclaim against it that their wickedness hath come up before Me.’

யோனா Jonah 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.
Arise, go to Nineveh, that great city, and cry against it; for their wickedness is come up before me.

ק֠וּםqûmkoom
לֵ֧ךְlēklake
אֶלʾelel
נִֽינְוֵ֛הnînĕwēnee-neh-VAY
הָעִ֥ירhāʿîrha-EER
הַגְּדוֹלָ֖הhaggĕdôlâha-ɡeh-doh-LA
וּקְרָ֣אûqĕrāʾoo-keh-RA
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
כִּֽיkee
עָלְתָ֥הʿoltâole-TA
רָעָתָ֖םrāʿātāmra-ah-TAHM
לְפָנָֽי׃lĕpānāyleh-fa-NAI

Cross Reference

ஆதியாகமம் 10:11
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,

நாகூம் 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:5
அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.

செப்பனியா 2:13
அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.

யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

யோனா 3:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.

ஏசாயா 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

2 இராஜாக்கள் 19:36
அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப் போய் நினிவேயில் இருந்துவிட்டான்.

ஆதியாகமம் 18:20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

நாகூம் 2:1
சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.

மீகா 3:8
நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

எசேக்கியேல் 3:5
விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.

எசேக்கியேல் 2:7
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

எரேமியா 1:7
ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

எஸ்றா 9:6
என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

யாக்கோபு 5:4
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.

மத்தேயு 10:18
அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள்.


Tags நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய் அதற்கு விரோதமாகப் பிரசங்கி அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்
Jonah 1:2 in Tamil Concordance Jonah 1:2 in Tamil Interlinear Jonah 1:2 in Tamil Image