1 இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்.

2 அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான்.

3 மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அப்போது எரேமியா கூறியது: “ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல, மாறாக ‘மாகோர் மிசாபீபு’ *என்றே அழைத்துள்ளார்.

4 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும் பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய். உன் கண் முன்னாலேயே அவர்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள். யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்; அவன் அவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான்.

5 இந்நகரின் செல்வங்களையும் உழைப்பின் பயன் அனைத்தையும் விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும் யூதா அரசரின் கருவூலங்களையும் அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள்.

6 பஸ்கூர்! நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும் நாடு கடத்தப்படுவீர்கள். நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட உன் நண்பர்களும் பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்; அங்கேயே புதைக்கப்படுவீர்கள்.

7 ⁽ஆண்டவரே!␢ நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்;␢ நானும் ஏமாந்து போனேன்;␢ நீர் என்னைவிட வல்லமையுடையவர்;␢ என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்;␢ நான் நாள் முழுவதும்␢ நகைப்புக்கு ஆளானேன்.␢ எல்லாரும் என்னை␢ ஏளனம் செய்கின்றார்கள்.⁾

8 ⁽நான் பேசும்போதெல்லாம்␢ ‘வன்முறை அழிவு’ என்றே␢ கத்த வேண்டியுள்ளது;␢ ஆண்டவரின் வாக்கு என்னை␢ நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும்␢ நகைப்புக்கும் ஆளாக்கியது.⁾

9 ⁽“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்;␢ அவர் பெயரால் இனிப்␢ பேசவும் மாட்டேன்” என்பேனாகில்,␢ உம் சொல் என் இதயத்தில்␢ பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.␢ அது என் எலும்புகளுக்குள்␢ அடைப்பட்டுக் கிடக்கின்றது.␢ அதனை அடக்கிவைத்துச்␢ சோர்ந்து போனேன்;␢ இனி என்னால்␢ பொறுத்துக்கொள்ள முடியாது.⁾

10 ⁽‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று␢ பலரும் பேசிக் கொள்கின்றார்கள்;␢ ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள்,␢ அவன்மேல் பழி சுமத்துவோம்’␢ என்கிறார்கள்.␢ என் நண்பர்கள்கூட␢ என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்;␢ ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்;␢ நாம் அவன்மேல் வெற்றி கொண்டு␢ அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்’␢ என்கிறார்கள்.⁾

11 ⁽ஆனால், ஆண்டவர்␢ வலிமை வாய்ந்த வீரரைப் போல␢ என்னோடு இருக்கின்றார்.␢ எனவே, என்னைத் துன்புறுத்துவோர்␢ இடறி விழுவர்.␢ அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள்.␢ அவர்கள் விவேகத்தோடு␢ செயல்படவில்லை;␢ அவர்களின் அவமானம் என்றும்␢ நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.⁾

12 ⁽படைகளின் ஆண்டவரே!␢ நேர்மையாளரை சோதித்தறிபவரும்␢ உள்ளுணர்வுகளையும்␢ இதயச் சிந்தனைகளையும்␢ அறிபவரும் நீரே;␢ நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை␢ நான் காணவேண்டும்;␢ ஏனெனில், என் வழக்கை␢ உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.⁾

13 ⁽ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்;␢ அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;␢ ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத்␢ தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.⁾

14 ⁽நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்;␢ என் அன்னை␢ என்னைப் பெற்றெடுத்த நாள்␢ ஆசி பெறாதிருக்கட்டும்.⁾

15 ⁽‘உனக்கோர் ஆண் குழந்தை␢ பிறந்துள்ளது’ என்ற செய்தியை␢ என் தந்தையிடம் சொல்லி␢ அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில்␢ ஆழ்த்திய அந்த மனிதன்␢ சபிக்கப்படுக!⁾

16 ⁽அவன், ஆண்டவர்␢ இரக்கமின்றி வீழ்த்திய␢ நகர்களுக்கு ஒப்பாகட்டும்.␢ அவன் காதில்␢ காலையில் அழுகைக் குரலும்␢ நண்பகலில் போர் இரைச்சலும்␢ ஒலிக்கட்டும்!⁾

17 ⁽தாய் வயிற்றில் நான் இருந்தபோதே,␢ அவள் ஏன் என்னைக்␢ கொல்லவில்லை?␢ என் தாயே எனக்குக்␢ கல்லறையாய் இருந்திருப்பாளே!␢ அவள் கருவறையிலேயே␢ என்றும் இருந்திருப்பேனே!⁾

18 ⁽கருவறைவிட்டு␢ ஏன்தான் வெளிவந்தேன்?␢ துன்ப துயரத்தை அனுபவிக்கவும்␢ என் வாழ்நாள்களை␢ வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ?⁾