ஏசாயா 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
Tamil Indian Revised Version
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தாவே! நீர் எங்களது தந்தை. நாங்கள் களிமண்ணைப் போன்றவர்கள். நீர் தான் குயவர். எங்கள் அனைவரையும் உமது கைகள் செய்தன.
Thiru Viviliam
⁽ஆயினும், ஆண்டவரே␢ நீரே எங்கள் தந்தை;␢ நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்;␢ நாங்கள் அனைவரும்␢ உம் கைவேலைப்பாடுகளே.⁾
King James Version (KJV)
But now, O LORD, thou art our father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.
American Standard Version (ASV)
But now, O Jehovah, thou art our Father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.
Bible in Basic English (BBE)
Be not very angry, O Lord, and do not keep our sins in mind for ever: give ear to our prayer, for we are all your people.
Darby English Bible (DBY)
And now, Jehovah, thou art our Father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.
World English Bible (WEB)
But now, Yahweh, you are our Father; we are the clay, and you our potter; and we all are the work of your hand.
Young’s Literal Translation (YLT)
And now, O Jehovah, thou `art’ our Father, We `are’ the clay, and Thou our Framer, And the work of Thy hand — all of us.
ஏசாயா Isaiah 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
But now, O LORD, thou art our father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.
| וְעַתָּ֥ה | wĕʿattâ | veh-ah-TA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אָבִ֣ינוּ | ʾābînû | ah-VEE-noo | |
| אָ֑תָּה | ʾāttâ | AH-ta | |
| אֲנַ֤חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo | |
| הַחֹ֙מֶר֙ | haḥōmer | ha-HOH-MER | |
| וְאַתָּ֣ה | wĕʾattâ | veh-ah-TA | |
| יֹצְרֵ֔נוּ | yōṣĕrēnû | yoh-tseh-RAY-noo | |
| וּמַעֲשֵׂ֥ה | ûmaʿăśē | oo-ma-uh-SAY | |
| יָדְךָ֖ | yodkā | yode-HA | |
| כֻּלָּֽנוּ׃ | kullānû | koo-la-NOO |
Cross Reference
ஏசாயா 29:16
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ?
ஏசாயா 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?
எரேமியா 18:2
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
ரோமர் 9:20
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
ஏசாயா 63:16
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
எபேசியர் 2:10
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
ஏசாயா 44:21
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
சங்கீதம் 100:3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
ஏசாயா 43:7
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.
சங்கீதம் 119:73
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
யோபு 10:8
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
உபாகமம் 32:6
விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே; இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்டபிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
கலாத்தியர் 3:29
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:26
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
ஏசாயா 44:24
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
சங்கீதம் 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
யாத்திராகமம் 4:22
அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
Tags இப்பொழுதும் கர்த்தாவே நீர் எங்களுடைய பிதா நாங்கள் களிமண் நீர் எங்களை உருவாக்குகிறவர் நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை
Isaiah 64:8 in Tamil Concordance Isaiah 64:8 in Tamil Interlinear Isaiah 64:8 in Tamil Image