Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 6:3 in Tamil

Home Bible Isaiah Isaiah 6 Isaiah 6:3

ஏசாயா 6:3
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
ஒருவரை ஒருவர் அழைத்து, அவர்கள்: “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர். அவரது மகிமை பூமியை நிரப்பியது” என்றனர். அவர்களின் சத்தம் மிகவும் பலமாக இருந்தது.

Thiru Viviliam
⁽அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:␢ “படைகளின் ஆண்டவர்␢ தூயவர், தூயவர், தூயவர்;␢ மண்ணுலகம் முழுவதும் அவரது␢ மாட்சியால் நிறைந்துள்ளது” என்று␢ உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.⁾

Isaiah 6:2Isaiah 6Isaiah 6:4

King James Version (KJV)
And one cried unto another, and said, Holy, holy, holy, is the LORD of hosts: the whole earth is full of his glory.

American Standard Version (ASV)
And one cried unto another, and said, Holy, holy, holy, is Jehovah of hosts: the whole earth is full of his glory.

Bible in Basic English (BBE)
And one said in a loud voice to another, Holy, holy, holy, is the Lord of armies: all the earth is full of his glory.

Darby English Bible (DBY)
And one called to the other and said, Holy, holy, holy is Jehovah of hosts; the whole earth is full of his glory!

World English Bible (WEB)
One called to another, and said, “Holy, holy, holy, is Yahweh of Hosts! The whole earth is full of his glory!”

Young’s Literal Translation (YLT)
And this one hath called unto that, and hath said: `Holy, Holy, Holy, `is’ Jehovah of Hosts, The fulness of all the earth `is’ His glory.’

ஏசாயா Isaiah 6:3
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
And one cried unto another, and said, Holy, holy, holy, is the LORD of hosts: the whole earth is full of his glory.

וְקָרָ֨אwĕqārāʾveh-ka-RA
זֶ֤הzezeh
אֶלʾelel
זֶה֙zehzeh
וְאָמַ֔רwĕʾāmarveh-ah-MAHR
קָד֧וֹשׁ׀qādôška-DOHSH
קָד֛וֹשׁqādôška-DOHSH
קָד֖וֹשׁqādôška-DOHSH
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
מְלֹ֥אmĕlōʾmeh-LOH
כָלkālhahl
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
כְּבוֹדֽוֹ׃kĕbôdôkeh-voh-DOH

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 4:8
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

சங்கீதம் 72:19
அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.

ஏசாயா 40:5
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

எண்ணாகமம் 14:21
பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

யாத்திராகமம் 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

எபேசியர் 1:18
தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;

ஏசாயா 24:16
நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன் இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம்பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன்.

ஏசாயா 11:9
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தில் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

சங்கீதம் 57:11
தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

சங்கீதம் 24:7
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

சங்கீதம் 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

எஸ்றா 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

யாத்திராகமம் 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.


Tags ஒருவரையொருவர் நோக்கி சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்
Isaiah 6:3 in Tamil Concordance Isaiah 6:3 in Tamil Interlinear Isaiah 6:3 in Tamil Image