Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 5:11 in Tamil

Home Bible Hebrews Hebrews 5 Hebrews 5:11

எபிரெயர் 5:11
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.

Tamil Indian Revised Version
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள்.

Thiru Viviliam
இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது; ஆனால், விளக்கம் கூறுவது அரிது. ஏனெனில், உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.

Title
விழாதிருக்க எச்சரிக்கை

Other Title
கிறிஸ்தவ வாழ்வில் உறுதி

Hebrews 5:10Hebrews 5Hebrews 5:12

King James Version (KJV)
Of whom we have many things to say, and hard to be uttered, seeing ye are dull of hearing.

American Standard Version (ASV)
Of whom we have many things to say, and hard of interpretation, seeing ye are become dull of hearing.

Bible in Basic English (BBE)
Of whom we have much to say which it is hard to make clear, because you are slow of hearing.

Darby English Bible (DBY)
Concerning whom we have much to say, and hard to be interpreted in speaking [of it], since ye are become dull in hearing.

World English Bible (WEB)
About him we have many words to say, and hard to interpret, seeing you have become dull of hearing.

Young’s Literal Translation (YLT)
concerning whom we have much discourse and of hard explanation to say, since ye have become dull of hearing,

எபிரெயர் Hebrews 5:11
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
Of whom we have many things to say, and hard to be uttered, seeing ye are dull of hearing.

Περὶperipay-REE
οὗhouoo
πολὺςpolyspoh-LYOOS
ἡμῖνhēminay-MEEN
hooh
λόγοςlogosLOH-gose
καὶkaikay
δυσερμήνευτοςdysermēneutosthyoo-sare-MAY-nayf-tose
λέγεινlegeinLAY-geen
ἐπεὶepeiape-EE
νωθροὶnōthroinoh-THROO
γεγόνατεgegonategay-GOH-na-tay
ταῖςtaistase
ἀκοαῖςakoaisah-koh-ASE

Cross Reference

2 பேதுரு 3:16
எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

மத்தேயு 13:15
இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:27
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.

யோவான் 16:12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

யோவான் 6:6
தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.

லுூக்கா 24:25
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

மாற்கு 8:21
அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

மாற்கு 8:17
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?

ஏசாயா 6:10
இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.

1 இராஜாக்கள் 10:1
கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,


Tags இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம் நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால் அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்
Hebrews 5:11 in Tamil Concordance Hebrews 5:11 in Tamil Interlinear Hebrews 5:11 in Tamil Image