தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.
பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
| And it came to pass | וַ֠יְהִי | wayhî | VA-hee |
| in the six | בְּאַחַ֨ת | bĕʾaḥat | beh-ah-HAHT |
| hundredth | וְשֵׁשׁ | wĕšēš | veh-SHAYSH |
| and first | מֵא֜וֹת | mēʾôt | may-OTE |
| year, | שָׁנָ֗ה | šānâ | sha-NA |
| in the first | בָּֽרִאשׁוֹן֙ | bāriʾšôn | ba-ree-SHONE |
| month, the first | בְּאֶחָ֣ד | bĕʾeḥād | beh-eh-HAHD |
| day of the month, | לַחֹ֔דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| the waters | חָֽרְב֥וּ | ḥārĕbû | ha-reh-VOO |
| were dried up | הַמַּ֖יִם | hammayim | ha-MA-yeem |
| from off | מֵעַ֣ל | mēʿal | may-AL |
| the earth: | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and Noah | וַיָּ֤סַר | wayyāsar | va-YA-sahr |
| removed | נֹ֙חַ֙ | nōḥa | NOH-HA |
| אֶת | ʾet | et | |
| the covering | מִכְסֵ֣ה | miksē | meek-SAY |
| of the ark, | הַתֵּבָ֔ה | hattēbâ | ha-tay-VA |
| and looked, | וַיַּ֕רְא | wayyar | va-YAHR |
| and, behold, | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
| the face | חָֽרְב֖וּ | ḥārĕbû | ha-reh-VOO |
| of the ground | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| was dry. | הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |